ஸ்ரீஹரிகோட்டா,ஆக.22- நிலவில் தரையிறங்க உள்ள விக்ரம் லேண்டரின் பயணம் சீராக உள்ளது என்று இந்திய விண் வெளி ஆராய்ச்சி கழகம் (இஸ்ரோ) அதிகாரப்பூர்வமாக தகவல் வெளி யிட்டுள்ளது. ஆகஸ்ட் 23 புதன்கிழமை மாலை 6.04 மணிக்கு சந்திரயான்-3 பய ணத்தின் இலக்காக நிலவின் தென் துரு வத்தில் விக்ரம் லேண்டர் தரையிறங்க உள்ளது. அதிலிருந்து பிரக்யான் ரோவர் நிலவின் பரப்பில் ஆய்வு மேற்கொள்ள உள்ளது. இந்த நிகழ்வை புதன் மாலை 5.20 மணி முதல் நேரலையில் ஒளிபரப்பு கிறது இஸ்ரோ. சமூக வலைதளம், இஸ்ரோ வலைதளம் மற்றும் தொலைக்காட்சியில் இது நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இந்நிலையில், லேண்டர் பொசிஷன் டிடெக்ஷன் கேமரா படம் பிடித்த நிலவின் படங்களை இஸ்ரோ தற்போது பகிர்ந்துள்ளது. கடந்த 19 ஆம் தேதி நிலவுக்கு சுமார் 70 கி.மீ தொலைவில் இந்தப் படம் எடுக்கப் பட்டது. இந்த கேமரா, லேண்டர் மாட லின் பொசிஷனுக்கு உதவி வரு கிறது. அதோடு விக்ரம் லேண்டரின் பயணம் திட்டமிட்டபடி சீராக உள் ளது. மேலும், அமைப்புகளை தொட ர்ந்து சோதனை செய்து வருவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.