நிலவில் தரையிறக்கப்பட்டுள்ள விக்ரம் லேண்டர் இன்று காலை 8 மணி முதல் ஸ்லீப் மோடில் வைக்கப்பட்டுள்ளது என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது. இது தொடர் பாக டுவிட்டர் எக்ஸ் தளத்தில் இஸ்ரோ வெளியிட்டுள்ள பதி வில், “விக்ரம் லேண்டர் செவ்வா யன்று காலை 08:00 மணி அள வில் ஸ்லீப் மோடில் (உறக்கம்) வைக்கப்பட்டுள்ளது. முன்ன தாக விக்ரம் லேண்டர் உயர்த்தப் பட்டு வேறு இடத்தில் இதமாக தரையிறக்கப்பட்டது. புதிய இடத்தில் விக்ரம் லேண்ட ரில் உள்ள சாஸ்டே (ChaSTE), ரம்பா எல்பி (RAMBHA-LP), இல்சா (ILSA) ஆகியவை சோதிக்கப் பட்டன. சேகரிக்கப்பட்ட தரவு பூமியில் பெறப்பட்டது. பேலோடுகள் அணைக்கப்பட்டுள்ளன. லேண்டர் ரிசீவர்கள் இயக்கத்தில் வைக்கப்பட்டுள்ள நிலை யில், சூரிய சக்தி தீர்ந்து, பேட்டரி தீர்ந்தவுடன் விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவரின் அருகில் ஸ்லீப் மோடில் இருக்கும். வரும் 22 அன்று இருவரும் விழித்தெழுவார்கள் என்று நம்புகிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலவில் தற்போது இரவு தொடங்குவதால், அங்கு குளிர் அதிகமாக இருக்கும். இதனால் விக்ரம் லேண்டர் ஸ்லீப் மோடில் வைக்கப் பட்டுள்ளது. நிலவில் பகல் பொழுது தொடங்கியதும் மீண்டும் அவற்றை இயக்க இஸ்ரோ திட்ட மிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.