ஹைதராபாத், ஏப்.13- ஆர்எஸ்எஸ்-ஸின் மாணவர் பிரிவான ஏபிவிபி-யைச் சேர்ந்த வர்கள், ஹைதராபாத் பல்க லைக்கழக வளாகத்தில் உள்ள ஒரு கல் அமைப்பை ராமர் கோவி லாக மாற்றி, அங்கு ராமநவமி கொண்டாடியது, சர்ச்சைக்கும், மாணவர்களின் கடும் எதிர்ப் புக்கு உள்ளாகி இருக்கிறது. “இது கல்வி வளாகத்தை காவிமயமாக்கும் முயற்சி; மாணவர்களை மத அடிப்படை யில் பிளவுபடுத்தும் முயற்சி” என்று இந்திய மாணவர் சங்கம் (SFI), அம்பேத்கர் மாணவர் சங் கம் (ASA) உள்ளிட்ட மாணவர் அமைப்புகள் துணைவேந்தரி டம் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்பட வில்லை என்றும் மாணவர்கள் தெரிவிக்கின்றனர். ஆண்கள் விடுதி-எப் மற்றும் தலைமை வார்டன் அலுவலகம் அருகே பாறை கற்களை அமைத்து, அவற்றில் காவி நிறத்தில் வர்ணம் பூசியதுடன், ஒரு மரத்தின் கீழ் ஒரு பாறை அமைப்பில் காவி கொடிகளு டன் ராமரின் இரண்டு புகைப் படங்களையும், பாறைகளில் ‘ஓம்’ மற்றும் ஸ்வஸ்திகா சின் னங்களை ஏபிவிபியைச் சேர்ந் தவர்கள் ஏற்படுத்தியுள்ளனர். இவ்வாறு ஒரு நிரந்தர மதக் கட்டமைப்பை நிறுவுவதற்கு எதிராக அறிவிப்பு அல்லது சுற் றறிக்கை வெளியிடுமாறு ஹைத ராபாத் பல்கலைக்கழக மாண வர் சங்கத்தின் தலைவர் அபி ஷேக் நந்தன் (SFI) வலியுறுத்தி யும் நிர்வாகம் எந்த நடவடிக்கை யும் எடுக்கவில்லை. இது ஹைத ராபாத் பல்கலைக்கழக வளா கத்தில் பதற்றத்தை ஏற்படுத்தி யுள்ளது. பல்கலைக்கழக நிர்வா கம் ஏபிவிபிக்கு துணைபோவ தாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.