states

‘ஜனதா பரிவாரின்’ மூத்த தலைவர் சரத் யாதவ் காலமானார்

புதுதில்லி, ஜன. 13 - ஒன்றிய முன்னாள் அமைச்சரும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் மூத்த  தலைவருமான சரத் யாதவ் (75) உடல்நலக்குறைவு காரணமாக குருகிராமில் உள்ள தனியார் மருத்துவமனையில் வியாழக்கிழமை இரவு காலமானார். ராம் மனோகர் லோகியா, ஜெயப்பிர காஷ் நாராயணன் வழியில் சோசலிஸ்ட் சிந்தனையாளராக தன்னை முன்னிறுத்திக் கொண்ட சரத் யாதவ், 1974-இல் மாணவ ராக இருக்கும்போதே ஜபல்பூர் இடைத்தேர்தலில் போட்டியிட்டவர். அப்போது துவங்கி தனது வாழ்நாளில் நாடாளுமன்ற மக்களவைக்கு 7 முறையும், மாநிலங்களவைக்கு 3 முறையும் தோ்ந்தெடுக்கப்பட்டு மக்கள் பணியாற்றிய சரத் யாதவ், 1989-ஆம் ஆண்டு வி.பி. சிங் அமைச்சரவையிலும், 1999-இல் வாஜ்பாய் அமைச்சரவையில் இடம் பெற்றார். சரண் சிங், வி.பி. சிங், தேவகவுடா, வாஜ்பாய் என  பல பிரதமர்களுடன் இணைந்து பணி யாற்றிய அவர், லாலு பிரசாத், ஜார்ஜ் பெர்னா ண்டஸ் என இந்திய அரசியலின்  மூத்த  தலைவர்களோடும் அரசியலில் பயணித்தார். மண்டல் கமிஷன் மற்றும் பிற்படுத்தப் பட்டோர் இடஒதுக்கீட்டை முன்வைத்து ஆங்கிலப் பத்திரிகைகளில் ஆழமான கட்டுரைகளை எழுதினார். இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவதில் உள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்டி நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் தொடர்ச்சியாக போராடி வந்தார்.

பின்னாளில், ஜனதா தளத்திலிருந்து வெளியேறி 1997-இல் ஐக்கிய ஜனதா தளம்  கட்சியைத் தொடங்கி, பிரதமா் வாஜ்பாய் தலைமையிலான ஒன்றிய அரசில் (1999-2004)  பல்வேறு துறைகளின் அமைச்சர் பதவியை  வகித்த சரத் யாதவ், பின்னா், ஐக்கிய ஜனதா  தளத்திலிருந்தும் விலகினார். லோக் தந்த்ரிக் ஜனதா தளம் என்ற கட்சியை 2018-இல் தொடங்கிய அவர், அதனைக் கடந்த ஆண்டு  லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியுடன் இணைத்தார். இந்நிலையிலேயே, உடல் நலம் சரி யில்லாமல், குருகிராமில் உள்ள ஃபோர்டிஸ் மெமோரியல் ரிசர்ச் இன்ஸ்டி டியூட் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்த சரத் யாதவ், அங்கு வியாழ னன்று இரவு 10.19 மணிக்கு காலமானார். சரத் யாதவ் மறைவுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சிபிஎம் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின், பீகார் முதல்வர் நிதிஷ் குமார், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் இரங்கல் தெரி வித்துள்ளனர்.  “ஸ்ரீ சரத் யாதவ் ஜியின் மறைவு வேதனை  அளிக்கிறது. தனது நீண்ட பொது வாழ்வில், எம்.பி., அமைச்சர் என தனித்து  விளங்கினார். டாக்டர் லோகியாவின் கொள்கைகளால் அவர் பெரிதும் ஈர்க்கப் பட்டார். நான் எப்போதும் அவரை போற்று வேன். அவரது குடும்பத்தினருக்கும் ஆதர வாளர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள்.  ஓம் சாந்தி” என்று பிரதமர் நரேந்திர மோடி  தனது இரங்கல் அறிக்கையில் குறிப்பிட்டுள் ளார். “சோசலிஸ்ட் தலைவரும் முன்னாள் ஜேடி(யு) தலைவருமான சரத் யாதவின் மறைவு எனக்கு வருத்தமளிக்கிறது. நாட்டிற்கு சேவை செய்த அவர், சமத்துவ அரசியலை வலுப்படுத்தினார். அவரது குடும்பத்தினருக்கும் ஆதரவாளர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்” என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இரங்கலில் தெரிவித்துள்ளார். ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ஆகியோர் சரத் யாதவின் உடலுக்கு நேரில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.