லக்னோ, மார்ச் 8 - உ.பி. தேர்தலில், காங்கிரஸ் கட்சி தன்னால் முடிந்தவரை போராடி இருப்ப தாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கூறியுள்ளார். உ.பி.யில் ஏழு கட்டங்களாக சட்டப் பேரவை பொதுத்தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. வாக்கு எண்ணிக்கை மார்ச் 10 அன்று நடக்கிறது. இதனி டையே, உ.பி.யில் பாஜக தனிப்பெரும் பான்மையுடன் ஆட்சியை தக்க வைக்கும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் கூறியுள்ளன. அதி லும் குறிப்பாக, காங்கிரஸ் கட்சி ஒற்றை இலக்கத்தில் மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும் எனவும் அந்தக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி லக்னோவில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்துள்ளார். அதில், “எங்க ளால் முடிந்தவரை போராடினோம். முடிவு களுக்காக காத்திருக்கிறோம். மகளிர் தினத்தை முன்னிட்டு எங்களின் 159 பெண் வேட்பாளர்களை கொண்டாடும் விதமாக லக்னோவில் அணிவகுப்பு நடத்துகிறோம். அவர்கள் அனைவரும் போ ராடியது பெரிய விஷயம் என நினைக்கி றேன். சர்வதேச மகளிர் தினத்தில் நாம் அவர்களை கொண்டாட வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.