புதுதில்லி, டிச.26- தில்லியில் கடந்த சில தினங்களாக கடுங்குளிர் வாட்டி வரு கிறது. 9.8 டிகிரி செல்சியஸ் அளவுக்கு குறைந்தபட்ச வெப்ப நிலை பதிவாகியுள்ளது. இதனால் பொதுமக்கள் வீடுகளுக் குள்ளே முடங்கியுள்ளனர். டிசம்பர் 26 ஞாயிறன்று காற்று தரக் குறியீடு 430 ஆக பதிவாகி இருப்பதாக காற்றின் தரம்- வானிலை முன்னறிவிப்பு ஆராய்ச்சி அமைப்பும் 458 ஆக பதிவாகியிருப்பதாக மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் தெரிவிக்கின்றன. இதற்கிடையில், காற்று தரக் குறியீடு, தில்லியை ஒட்டிய புற நகர் பகுதிகளான குருகிராமில் 375 ஆகவும் நொய்டாவில் 570 ஆகவும் பதிவாகி உள்ளது. காற்று தரக் குறியீடு என்பது காற்றின் தரத்தை குறிப்ப தற்கு பயன்படும் ஒரு அளவு ஆகும். இந்த குறியீடு 0 முதல் 50 வரை இருந்தால் காற்று நல்ல தரத்துடன் உள்ளது என்று பொருள். அதே போல் 51 முதல் 100 வரை இருந்தால் காற்றின் தரம் திருப்திகரமான அளவில் உள்ளது. 101 முதல் 200 வரை இருந்தால் மிதமான தரம், 201 முதல் 300 வரை இருந்தால் மோச மாக உள்ளது, 301 முதல் 400 வரை இருந்தால் மிக மோசமாக உள்ளது, 401 முதல் 500 வரை இருந்தால் மிகக் கடுமையாக காற்று மாசடைந்து உள்ளது என்று அறியப்படுகிறது. 100-க்குள் இருக்க வேண்டிய காற்று தரக் குறியீடு அளவு, தொடர்ந்து 400க்கும் மேல் பதிவாகி வருவதால் தலைநகரில் வசிக்கும் மக்கள், பொதுமுடக்கம் அமலில் இருப்பது போல வீட்டிலேயே முடங்கிக் கிடக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.