புதுதில்லி, ஏப்.11- ஒன்றிய பாஜக அரசின் நடவடிக்கையால் பெட்ரோல்,டீசல் ,சமையல் எரிவாயு ஆகிய வற்றின் விலை இதுவரை இல்லாத அளவில் உயர்ந்துள்ளது. இதன்மூலம் அத்தியா வசியப்பொருட்களின் விலையும் கடுமையாக அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். மக்களின் கஷ்டத்தை பற்றி பிரதமர் மோடியோ மற்றும் அமைச்சர்களோ கண்டுகொள்ளாமலும் கவலைப்படாமலும் உள்ளனர். இதற்கு ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானியின் பேச்சு மேலும் ஒரு உதாரணமாக உள்ளது. தில்லியில் இருந்து குவாஹாத்திக்கு சென்ற விமானத்தில் பயணம் செய்த மகிளா காங்கிரஸ் கட்சி தலைவர் நீட்டா டிசோசா தன்னுடன் அதே விமானத்தில் பயணம் செய்த ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானியிடம் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு குறித்து கேள்வி எழுப்பினார். விமானத்தில் இருந்து இறங்க முயன்ற அமைச்சர் ஸ்மிருதி இரானியை அழைத்த நீட்டா டிசோசா, “2014 ஆம் ஆண்டு பெட்ரோல், டீசல் மற்றும் எல்.பி.ஜி. சிலிண்ட ரின் விலையை ஒப்பிடும்போது, சிலிண்ட ரின் விலை பன்மடங்கு உயர்த்தப்பட்டிருப்ப தாக” கூறிய டிசோசா, “தற்போது சிலிண்டர் விலை 1000 ரூபாயை தாண்டியுள்ளது ஏன்?” என்று கேள்வி எழுப்பினார். நீட்டா டிசோசாவின் இந்த கேள்வியை சற்றும் எதிர்பாராத ஸ்மிருதி இரானி, “நீங்கள் மற்ற பயணிகள் இறங்குவதற்கு வழிவிடா மல் மறித்து நிற்கிறீர்கள்” என்றுமழுப்பினார். “விலைவாசி உயர்வால் அனைவரும் அல்லல்படுகிறார்கள் அது உங்களுக்கு தெரி யவில்லையா?” என்று டிசோசா கூறினார். இதற்கு அமைச்சர் ஸ்மிருதி இரானி, “அவர்கள் யாரும் இதுகுறித்து பேசவில்லை. நீங்கள் தான் குற்றம்சாட்டுகிறீர்கள்” என்று அலட்சியமாக பதில் கூறினார். பின்னர் விலை வாசி உயர்வு குறித்த காரணத்தை கூறாமல் அங்கிருந்து வேகவேகமாக நகர்ந்து சென்றார்.