புதுதில்லி, மே 23- ஞானவாபி மசூதியை தொடர்ந்து குதுப்மினார் வளாகத்தில் அகழாய்வு செய்ய உத்தரவிடப்பட்டு இருப்பதாக வெளியான தக வலை ஒன்றிய அரசு மறுத் துள்ளது. தில்லியில் உள்ள புராதன நினைவுச் சின்னங்களில் குதுப்மினார் கோபுரமும் ஒன்று. இதனை குட்புதின் -அய்பக் கட்டவில்லை. இந்து மன்ன ரான விக்கிரமாதித்யா என்ப வரே கட்டினார் என்ற ஓய்வு பெற்ற தொல்லியல் துறை அதிகாரி தரம் விர் ஷர்மாவின் கூற்று சர்ச்சைக்கு வித்திட்டது. இது உண்மையா என் பதை கண்டறிய குதுப்மினார் வளாகத்தில் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க தொல் லியல் துறைக்கு உத்தரவிடப் பட்டுள்ளதாக தகவல் பரவிய தால் சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்து குதுப் மினார் வளாகத்தில் அகழ்வா ராய்ச்சி ஏதும் நடத்தப்போவ தில்லை என்று ஒன்றிய கலாச் சாரத்துறை அமைச்சகம் திட்ட வட்டமாக தெரிவித்துள்ளது. அப்படியான எந்த முடிவும் இதுவரை எடுக்கப்பட வில்லை என்று அமைச்சர் கிஷன் ரெட்டி கூறியுள்ளார்.