states

img

வெங்காயம், தக்காளி விலையை குறைக்க மோடி பிரதமர் ஆகவில்லை!

தானே, பிப்.2- “மோடி ஒன்றும் தக்காளி, வெங்காயம் விலையை குறைப் பதற்காக பிரதமர் ஆகவில்லை!” என ஒன்றிய அரசின் பஞ்சாயத்து ராஜ் இணையமைச்சர் கபில் பாட் டில் கூறியுள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் தானே யில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில் கபில் பாட்டில் மேலும் கூறியிருப்பதாவது: “பிரதமர் மோடி குடியுரிமைச் சட்டம், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து போன்ற துணிச்சலான முடிவு களை எடுத்து நம் நாட்டை வழி நடத்து கிறார். ஆனால், விலைவாசி உயர் வுக்கு பிரதமர் மோடியை மக்கள் குறை கூறுகின்றனர். மட்டன் இறைச்சியை ரூ. 700 கொடுத்து வாங்குகிறார்கள். பீட்சா-வை ரூ. 500 கொடுத்து வாங்குகிறார்கள்.

ஆனால் 10 ரூபாய்க்கு வெங்காய மும், 40 ரூபாய்க்கு தக்காளியும் கிடைக்கும் போது, இந்த விலை அதிகம் என்று குற்றம் சாட்டுகின்ற னர். மோடி ஒன்றும், வெங்காயம் விலையையோ, உருளைக்கிழங்கு விலையையோ குறைப்பதற்காக பிரதமர் ஆகவில்லை. எனவே, வெங்காயம், தக்காளி, உரு ளைக்கிழங்கு விலையை மோடி குறைக்க வேண்டும் என்ற மனநிலை யிலிருந்து வெளியே வரவேண்டும். 2024-ஆம் ஆண்டுக்குள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவுடன் இணைக்கப்படும். நரேந்திர மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் அதனை செய்து முடிப்பார்கள். இவ்வாறு கபில் பாட்டில் பேசி யுள்ளார்.