states

img

2024-க்குள் பாஜக ஆளும் மாநிலங்களில் பொதுசிவில் சட்டம்

புதுதில்லி, ஏப்.24- பொதுசிவில் சட்டம் என்பது பெரும் பான்மையினரின் சட்டத்தை அனை வரின் மீதும் திணிப்பதாகும். அதற்குச் செயல்வடி வம் கொடுக்க முயற்சிப் பது நாட்டில் குழப்பத் தையே ஏற்படுத்தும் என்ற நிலையில் அமித்ஷா வகையறாக்கள் பொதுசிவில் சட்டம் கொண்டு வருவது உறுதி என மீண்டும் மீண்டும் கூறிவருகின்றனர். பாஜக ஆளும் மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் பாஜக அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்றார். அப்போது, உத்தர்கண்டைத் தொடர்ந்து பாஜக ஆளும் மாநிலங்களில் சட்டமன்றங்கள் மூலம் பொதுசிவில் சட்டம் படிப்படியாக அமல்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டார். மத்தியப்பிரதேசத்தில் வரும் 2023-ஆம் ஆண்டு தேர்தல் நடை பெறவுள்ள நிலையில் ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவின் அறிவிப்பு மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜக ஆளும் உத்தரப்பிரதேசத்தில், துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா பேசுகையில், ‘‘தொடர்ந்து  இரண்டாவது முறை வெற்றிக்குப் பிறகு முதல்வர் யோகி ஆதித்யநாத், பொது சிவில் சட்டம் கொண்டு வரும்  நடவடிக்கைக்குத் தயாராகி வருகிறார்.  இந்தச் சட்டத்தை  நாடு முழுவதிலும் அமலாக்க வேண்டிய தருணம் வந்துள்ளது. அரசியல் காரணங்களுக்காக இதற்கு முந்தைய அரசுகள் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த முன்வரவில்லை. இந்தச் சட்டத்தை அனைவரும் ஏற்று வரவேற்கத் தயாராக வேண்டும்’’ என்றார்.