புதுதில்லி, மார்ச் 24- உள்ளூர் தரவு மையங்கள் அமைக்க மானியம் வழங்கும் யோசனை எதுவும் ஒன்றிய அரசிடம் இல்லை என்று ஒன்றிய மின்னணு- தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திர சேகர் தெரிவித்துள்ளார். இது குறித்து தூத்துக்குடி திமுக எம்.பி., கனிமொழி எழுப்பிய கேள்வியில், ‘‘நாட்டின் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியை விரி வாக்கும் வகையில் உள்ளூர் தரவு மையங்கள் (டொமஸ்டிக் டேட்டா சென்டர்ஸ்) ஏற்படுத்துவதை ஊக்குவிக்க ஒன்றிய அரசாங்கம் பரிசீலித்து வருகிறதா? அப்படி பரிசீலித்து வருகிறது என்றால் உள் ளூர் தரவு மையங்கள் அமைப்ப தற்காக ஏதேனும் ஊக்கத்தொகை அல்லது மானியங்கள் வழங்கப் பட்டிருக்கிறதா?’’ எனக் கேட்டிருந் தார். இந்தக் கேள்விக்கு ஒன்றிய மின்னணு - தகவல் தொழில்நுட்பத் துறைக்கான இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் அளித்த பதி லில், “தரவு மையங்கள் எனப்படும் டேட்டா சென்டர்கள் அமைப்ப தற்கான ஊக்கத் தொகைகள் அல் லது மானியங்கள் வழங்குவதற் கான யோசனை எதுவும் அரசிடம் இல்லை.
டேட்டா சென்டர்கள் என்ப வை ஒட்டுமொத்த ‘டிஜிட்டல் இந்தியா’ உள் கட்டமைப்பின் ஒரு முக்கிய ஒருங்கிணைந்த அங்க மாகும். பொது கிளவுட் எனப்படும் உலகளாவிய நெட்வொர்க் சர்வர் கள் அடிப்படையிலான சேவை கள் தற்போது அதிகரித்து வரு கின்றன. இதனால் தரவு மையங் களுக்கான தேவையும் அதிகரித் திருக்கிறது. இதன் அடிப்படையில் தேசியத் தரவு மையக் கொள்கை ஆய்வில் இருக்கிறது. உலகளா விய நெட்வொர்க் மற்றும் டேட்டா சென்டர்களுக்கான முதன்மை யான இடமாக இந்தியாவை உருவாக்க வேண்டும். பசுமை தரவு மையம் மற்றும் கிளவுட் சேவைகளுக்கான உலக ளாவிய மையமாக இந்தியாவை உருவாக்க உள்ளோம். தேசிய தரவு மையக் கொள்கையாக, தகவல் தொழில்நுட்பத்தில் பாதுகாப்பான மற்றும் நம்பகமான உள்கட்ட மைப்புக்கான உள்நாட்டு உப கரணங்கள் மற்றும் தயாரிப்புகள், தீர்வுகளை ஊக்கப்படுத்தும் வகை யில் இருக்கும்.
நமது ஒவ்வொரு கொள்கை முடிவிலும், பொது மக்களுடனான ஆலோசனை ஒரு முக்கியமான விதிமுறையாகவே இருக்கிறது. அந்த அடிப்படையில் தேசிய தரவு மைய கொள்கைக்காக கடந்த பிப்ரவரி 22 அன்று சென்னையில் பொது ஆலோசனை மற்றும் கலந் தாய்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், 65-க்கும் மேற்பட்ட பெரு நிறுவனங்கள் மற்றும் ஒன்றிய - மாநில அரசு அதிகாரிகள் நேரில் கலந்து கொண்டனர். மேலும், 295-க்கும் மேற்பட்டோர் காணொலி வாயிலாக கலந்துகொண்டு ஆலோ சனைகளை முன்வைத்துள்ளனர். இவர்களது ஆலோசனைகளின் அடிப்படையில் தேசிய தரவு மைய கொள்கை ஆய்வு செய்யப்பட்டு வருகிறது’’ என்று அமைச்சர் பதிலளித்தார்.