புதுதில்லி, நவ. 8 - அனைத்து மாநிலங்களுக்கும், நவம்பர் மாதத்திற்கான வரிப்பகிர்வு நிதியாக மொத்தம் ரூ. 72 ஆயிரத்து 961 கோடியை ஒன்றிய அரசு விடுவித்துள்ளது. இதில், தமிழ்நாடு அரசுக்கு ரூ. 2 ஆயிரத்து 976 கோடியே 10 லட்சத்தையும், அதிகபட்சமாக உத்தரப் பிரதேச மாநிலத்திற்கு 13 ஆயி ரத்து 088 கோடியே 51 லட்சத்தையும் ஒன்றிய அரசு விடுவித்துள்ளது. தீபாவளி பண்டிகை காலத்தை ஒட்டி 3 நாட்களுக்கு முன்பாகவே வரி பகிர்வு நிதி யானது அனைத்து மாநிலங்களுக்கும் விடு விக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றாலும், இந்த வரிப்பகிர்வு தமிழ்நாடு அரசுக்கான வஞ்ச னையாக பார்க்கப்படுகிறது. மேலும், பாஜக செல்வாக்காக இருக்கும் பீகாருக்கு 7 ஆயிரத்து 338 கோடி ரூபாயை யும், மத்தியப் பிரதேசத்திற்கு 5 ஆயிரத்து 727 கோடி ரூபாயையும் விடுவித்துள்ளது. இதுதொடர்பாக டுவிட்டர் எக்ஸ் பக்கத்தில் கருத்துப் பதிவிட்டிருக்கும் சு. வெங்கடேசன் எம்.பி. “மாநிலங்களுக்கான வரி பங்கீட்டில் 5 தென்னிந்திய மாநிலங் களுக்கும் சேர்த்து 11,527.86 கோடி விடு வித்துள்ள ஒன்றிய அரசு, உத்தரப்பிரதேசத் திற்கு மட்டும் 13,088.51 கோடி விடுவித்துள் ளது ஏன்? இந்த விகிதாச்சாரத்திற்கு ஒன்றிய அரசு விளக்கம் அளிக்குமா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.