states

img

ஸ்டார்ட்அப்கள் மூலம் வேலைவாய்ப்புகளை கேரளம் உறுதி செய்கிறது

கொல்லம், டிச.17- ஸ்டார்ட் அப்கள் மூலம் இளைஞர் களுக்கு வேலை வாய்ப்பை கேரளம் உறுதி செய்து வருவதாக ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.  கொல்லம் பாத்திமா மாதா தேசிய கல்லூரியின் பட்டமளிப்பு விழாவை நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார். அப்போது அவர் மேலும் கூறியதவாது:  இளைஞர்கள் படித்துவிட்டு வேலை தேடுவதை விட முதலாளிகளாக மாற முயற்சிக்க வேண்டும். அவர்கள் தங்கள் தொலைபேசிகள் மூலம் கொட்டும் தரவு களின் வெள்ளத்திலிருந்து உண்மையான மற்றும் பொருத்தமான தகவல்களைப் பெற  முடியும். இந்தியா மாற்றத்தின் பாதையில் செல்கிறது. 2047-க்குள் வளர்ந்த இந்தியா என்ற இலக்கை அடையும். கேரளாவின் ஸ்டார்ட் அப் வாய்ப்புகளை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். விண்வெளி மற்றும் அணுசக்தி துறைகள் உள்ளிட்டவைகளை தனியார் தொழில் முனைவோருக்கு ஒன்றிய அரசு திறந்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார். கொல்லம் பிஷப் பால் அந்தோணி முல்லச்சேரி தலைமை வகித்தார். என்.கே. பிரேமச்சந்திரன் எம்.பி., கேரள பல்கலைக் கழக துணைவேந்தர் மோகனன் குந்நும்மாள், முன்னாள் ஒன்றிய அமைச்சர் கே.வி.தாமஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.