மத்தியப் பிரதேச மாநிலத் தில் நவம்பர் 17 அன்று ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சி யை பிடிக்கும் என பெரும் பாலான கருத்துக்கணிப்புகள் வெளியாயின. இந்நிலையில், தோல்வி பயம் காரணமாக பாஜக மக்களுக்கு பணத்தை வாரி இறைக்க தயாராகியுள்ளதாக கடந்த வாரமே ஆதாரமற்ற தக வல் வெளியாகியது. இந்நிலையில், மத்தியப்பிர தேச சட்டமன்ற தேர்தலுக்காக பாஜக ரூ.100 கோடி செலவு செய்ய உள்ளதாக வீடியோ ஆதா ரத்துடன் புதிய தகவல் ஒன்றும் வெளியாகியுள்ளது. ஒன்றிய வேளாண் அமைச்சரும், மத்தி யப்பிரதேச பாஜக மூத்த தலைவ ருமான நரேந்திர சிங் தோமரின் மூத்த மகன் தேவேந்திர பிரதாப் சிங் வாட்ஸ் அப் வீடியோ காலில் இடைத்தரகர் ஒருவரிடம், “தியாகி என்ற குடும்பப்பெயர் கொண்ட ஒருவர், ஓய்வு பெற்ற ரிசர்வ் வங்கி கமிஷனர் மூலம் ரூ.100 கோடி கொடுக்கத் தயா ராக இருப்பதாகவும், ராஜஸ் தான் மற்றும் மொஹாலியைச் (பஞ்சாப்) சேர்ந்த சுரங்க மற்றும் நிலத் தொழிலதிபர்களிடம் இருந்து கோடிக்கணக்கான பணத்தை மாற்ற வேண்டும்” எனவும் கூறு கிறார். அதற்கு இடைத்தரகர் ரூ. 100 கோடி பரிவர்த்தனைக்கு 5 வங்கிக் கணக்குகளை கேட்கிறார். இந்த சம்பவம் நிகழ்ந்து 15 நாட் கள் ஆன நிலையில், தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்க உள்ளதாக காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. அத்துடன், அமலாக்கத்துறை, சிபிஐ, வரு மானவரித்துறை விசாரிக்க வேண்டுமெனவும் காங்கிரஸ் கோரிக்கை வைத்துள்ளது.