புதுதில்லி, மார்ச் 23 - பழைய ஓய்வூதியத் திட்டத்திற் காக போராடினால் கடும் நட வடிக்கை எடுக்கப்படும் என்று ஒன்றிய அரசின் கால்நடை பரா மரிப்பு மற்றும் பால் வளத் துறை எச்சரித்துள்ளது. பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி, நாடு முழு வதும் போராட்டங்கள் நடை பெற்று வருகின்றன. தற்போது ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், பஞ்சாப் மற்றும் இமாச்சலப் பிரதேசம் ஆகிய 5 மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஆனால் நாடு முழுவதும் இத்திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என பல்வேறு துறை சார்ந்த அரசு ஊழியர்களும் போராடி வருகின்றனர். மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், அரசு ஊழி யர்களின் பிரதிநிதிகளுக்கும், முதல் வர் ஏக்நாத் ஷிண்டேவுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தை யில் சுமூகத் தீர்வு எட்டப்பட்டுள்ள தாக வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர் அமைப்புகளின் ஒருங்கிணைப்புக் குழுவின் பிரதி நிதி விஸ்வாஸ் கட்கர் கூறியுள் ளார்.
“புதிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் உள்ள ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்துக்கு இணை யான பணப் பலன்களை வழங்க கொள்கை அடிப்படையில் மாநில அரசு ஒப்புக்கொண்டுள்ளது” என்று அவர் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டிலும், சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் என்ற பெயரில் பழைய ஓய்வூதியத் திட்டத்துக்காக பல்வேறு போராட்டங்கள் நடை பெற்று வருகின்றன. இந்நிலையில், மாநில அரசு ஊழியர்கள் மட்டுமல்லாமல், பல்வேறு மாநிலங்களில் ஒன்றிய அரசு ஊழியர்களும் பழைய ஓய்வூதி யத் திட்டத்தை கொண்டுவரக்கோரி போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில், பழைய ஓய்வூதியத் திட்டத்திற்காகப் போராட்டத்தில் ஈடுபடும் ஒன்றிய அரசு ஊழியர்களை ஒன்றிய கால் நடை பரிமரிப்பு மற்றும் பால்வளத் துறை எச்சரித்துள்ளது. தங்கள் துறையைச் சார்ந்த யாரும் போராட்டத்தில் ஈடுபடக் கூடாது எனவும், வேலைக்கு வந்தாக வேண்டும் என்றும் கூறியுள்ள ஒன்றிய கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை, மீறி யாராவது போராட்டத்தில் பங்கேற் றால் அவர்களின் பெயர் பட்டி யலைத் தயாரித்து வழங்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதையும் மீறி போராட்டத்தில் ஈடுபட்டால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என மிரட்டல் விடுத்துள்ளது.