states

10,000 மின்சாரப் பேருந்துகள்: ரூ.77,613 கோடி ஒதுக்கீடு

புதுதில்லி, ஆக. 16- நாடாளுமன்ற கூட்டத் தொடருக்குப் பிறகு நடைபெற்ற ஒன்றிய அமைச்சரவைக் கூட்டத்தில் 4 முக்கிய  திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.  பிரதமர் மோடி தலைமையில் புதனன்று நடைபெற்ற  ஒன்றிய அமைச்சரவைக்  கூட்டத்தில் 10,000 மின்சார பேருந்து கள் வாங்க ரூ.77,613 கோடி ஒதுக்கப்படும் எனவும், மின்சார பேருந்துகளை இயக்குவதற்கான திட்ட மதிப்பீடு  ரூ.57,613 கோடியில் ரூ.20,000 கோடியை ஒன்றிய அரசு தரும் என்றும், ஒன்றிய அரசின் மின்சார பேருந்து திட்டத்தால் 45,000ல் இருந்து 55,000 பேர் வரை வேலை வாய்ப்பு கிடைக்கும் எனவும், அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்தார். பிரதமர் மோடி தனது சுதந்திர தின உரையில் அறிவித்த ‘விஸ்வகர்மா’ திட்டத்திற்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் நெச வாளர்கள், பொற்கொல்லர்கள், சலவைத் தொழி லாளர்கள் மற்றும் முடிதிருத்தும் தொழிலாளர்கள் உள்ளிட்ட பாரம்பரிய கைவினைஞர்களுக்கு மானியக் கடன் வழங்கவும், முதல் தவணையாக ரூ.1 லட்சமும், இரண்டாவது தவணையாக ரூ.2 லட்சமும் மானி யத்துடன் கூடிய கடனாக 5% வட்டி விகிதத்தில் வழங்கப்படும். ரூ.32,500 கோடி மதிப்பீட்டில் ரயில்வே அமைச்ச கத்தின் 7 மல்டி டிராக்கிங் திட்டங்களுக்கும் ஒன்றிய அமைச்ச ரவை ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் விரிவாக்கத்திற்கு ரூ.14,903 கோடிஒதுக்க ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.