states

உக்ரைன்- ரஷ்யா போர்: சில தகவல்கள்

  •     நேட்டோவில் சேரும் வாய்ப்பு தனக்கு இல்லை என்பதை உக்ரைன் உணரும் காலம் வந்துவிட்டது எனவும் நேட்டோ இவ்வளவு பலவீனமாக இருந்ததே இல்லை எனவும் உக்ரைன் ஜனாதிபதி சாடியுள்ளார். தனது ஆதரவு நாடான உக்ரைனை காப்பாற்ற முன்வரவில்லை எனில் நேட்டோ விதி 5ன் படி உறுப்பு நாடுகளை எப்படி நேட்டோ காப்பாற்றும் எனவும் கேள்வி எழுப்பியுள்ள ஜெலன்ஸ்கி ரஷ்யாவுடன் ராணுவ ரீதியாக முரண்பட நேட்டோ தயாராக இல்லை எனவும் குற்றம்சாட்டினார்.
  •     உக்ரைன் போரில் அமெரிக்கா சொல்படி கேட்க சவூதி அரேபியாவும் அரபு அமீரகமும் தயாராக இல்லை. இதனால் கோபமுற்ற அமெரிக்கா சவூதிக்கு எதிரி நாடான கத்தாருக்கு நேட்டோவில் துணை உறுப்பினர் பதவி தந்தது. இதற்கு பதிலடியாக சவூதி இனி தனது எண்ணெய் வணிகத்தை டாலரில் நடத்தாமல் சீனாவின் யுவானில் நடத்தப் போவதாக கூறியது. இப்பொழுது சவூதியை சமாதனப்படுத்த பிரிட்டன் ஜனாதிபதி போரிஸ் ஜான்சன் சவூதிக்கும் அமீரகத்துக்கும் செல்ல திட்டமிட்டுள்ளார்.
  •     தனது எண்ணெயை குறைந்த விலைக்கு தருவதாக ரஷ்யா இந்தியாவுக்கு தெரிவித்தது. இதனை பரிசீலனை செய்ய இந்தியா முடிவு செய்தது. ரஷ்யாவின் எண்ணெய் வாங்குவது குறித்து பலமுறை யோசிக்குமாறும் இல்லையெனில் எதிர் நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும் எனவும் அமெரிக்கா மிரட்டியுள்ளது.
  •     ரஷ்ய ராணுவம் உக்ரைனின் கப்பற்படையின் பல போர்க் கப்பல்கள் மற்றும் படகுகளை பெர்டியான்ஸ்க் எனும் நகரில் கைப்பற்றியுள்ளது. இவை கருங்கடலில்
  • ரஷ்ய கப்பல்களை தாக்க திட்டமிட்டு வந்தன. ஆனால் ரஷ்ய படைகள் நெருங்குவதை கண்ட கப்பற்படை அதிகாரிகளும் வீரர்களும் எவ்வித பாதிப்பையும் கூட ஏற்படுத்தாமல் ஓடிவிட்டனர். பல முக்கிய ஆவணங்களையும் விடுவிட்டுச் சென்றனர்.
  • இது உக்ரைன் படையினரின் பலவீனமான நம்பிக்கையை வெளிப்படுத்துவதாக அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.
  •     ரஷ்யா- உக்ரைன் போர் காரணமாக இதுவரை 30 லட்சம் பேர் அகதிகளாக பல்வேறு நாடுகளுக்கு தஞ்சம் அடைந்துள்ளனர் என ஐ.நா.சபை தெரிவித்துள்ளது. போலந்திலிருந்து இனி அகதிகளை ரயில்கள்மூலம் அனுப்ப வேண்டாம் என ஜெர்மனி அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
  •     ரஷ்யாவின் எண்ணெய்யை வாங்குவதை உடனே நிறுத்தினால் ரஷ்யாவைவிட ஜெர்மனிதான் அதிகம் பாதிக்கப்படும்; விலைவாசியும் வேலையின்மையும் அதிகரிக்கும் என ஜெர்மனி கூறியுள்ளது. மேலும் ரஷ்யாவுக்கு மருந்துகளும் விவசாயப் பொருட்களையும் கொடுப்பதை நிறுத்த போவதில்லை எனவும் ஜெர்மனி அறிவித்துள்ளது.
  •     உக்ரைனில் உள்ள உயிரி சோதனைக் கூடங்கள் குறித்து மக்களுக்கு உண்மைகளை தெரிவிக்க வேண்டும் என கூறிய முன்னாள் அமெரிக்கா நாடாளுமன்ற உறுப்பினர் துல்சி கப்பார்டை பல அமெரிக்க தலைவர்களும் ஊடகங்களும் கடுமையாக விமர்சித்துள்ளன. சிலர் துல்சி ரஷ்யாவின் ஏஜெண்ட் எனவும் அபாண்டமாக குற்றம்சாட்டியுள்ளனர். இவர் இந்திய வம்சா வளியினர் என்பது குறிப்பிடத்தக்கது. அரசின் கருத்தாக்கத்தை எதிர்த்தால் தேசத் துரோகி பட்டம் இந்தியாவில் மட்டுமல்ல; அமெரிக்காவிலும் உண்டு.
  •     சீனாவின் இணைய முகவரிகளை திருடி அவற்றின் பெயரால் உக்ரைன் மற்றும் ரஷ்யாவின் பல முக்கிய இணையதளங்களை அமெரிக்கா ஹேக் செய்து வருகிறது என சீனா குற்றம்சாட்டியுள்ளது. ஹேக் செய்யும் சைபர் தாக்குதல்களின் சாம்ராஜ்யமாக அமெரிக்கா உருவெடுத்துள்ளது எனவும் சீனா கடுமையாக விமர்சித்துள்ளது.
  •     உக்ரைனின் நாஜிக்களால் இயக்கப்பட்டு வந்த மரியபோல் நகரில் உள்ள 53ஆவதுபட்டாலியன் முழுவதையும் அழித்துவிட்டதாகவும் இனி 53ஆவது பட்டாலியனில்  நாஜிக்களே இல்லை எனவும் ரஷ்ய ராணுவம் அறிவித்துள்ளது.
  •     உக்ரைன் அகதிகளை பராமரிக்க தேவையான உதவிகளை மால்டோவா அரசுக்கு நிவாரணப்பொருட்கள் தருவதற்கு சீனா முடிவு செய்துள்ளது.
  •     ரஷ்யாவின் தங்கம் மற்றும் அந்நியச் செலவாணி சுமார் 600 பில்லியன் டாலர்களில் 300 பில்லியனை மேற்கத்திய நாடுகள் முடக்கி வைத்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.