states

உதயநிதி பேச்சு திரிப்பு: பாஜகவுக்கு காங். பதிலடி

புதுதில்லி, செப். 4 - உதயநிதியின் பேச்சு  பற்றி காங்கிரஸ் வாய்திறக்க வேண்டும் என்று பாஜக  அமைச்சர்கள் கூப்பாடு போட்ட பின்னணியில், அமைச்சர் உதயநிதியின் சனாதனம் தொடர்பான விமர் சனம் குறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் பதில் அளித்துள்ளார். தில்லியில் செய்தியா ளர்களிடம் பேசிய அவர், “ஒவ் வொரு கட்சிக்கும் கருத்து  சொல்ல சுதந்திரம் உண்டு” என்றார்.  “எங்கள் பார்வை தெளி வாக உள்ளது. ‘சர்வ தர்ம  சமபவ’ (அனைத்து மதங் களுக்கும் மரியாதை தரு வது) என்பது காங்கிரஸின் சித்தாந்தம். ஆனால், ஒவ் வொரு அரசியல் கட்சிக்கும் தங்கள் கருத்துக்களைச் சொல்ல சுதந்திரம் உண்டு. அந்த வகையில் அனை வரின் நம்பிக்கைகளையும் நாங்கள் மதிக்கிறோம்” என்று கூறினார். இதனிடையே, கர்நாடக காங்கிரஸ் அமைச்சர் பிரி யங்க் கார்கேவும், “சமத்து வத்தை வளர்க்காத அல்லது மனிதனாக மதிக்க கற்றுக் கொடுக்காத எந்த மதமும் என்னைப் பொறுத்தவரை மதம் அல்ல. மக்களை சமத்துவத்துடன் நடத்தாத எந்த மதமும் ஒரு நோயைப் போன்றதுதான்” என்று பாஜக-வுக்கு பதிலடி கொடுத் துள்ளார்.