சில இடங்களின் பெயர்கள் மாற்ற முயற்சி!
சீனாவுக்கு இந்தியா கடும் கண்டனம்
அருணாச்சலப்பிரதேசத்தின் சில பகுதிகளின் பெயர்களை மாற்ற சீன அரசாங்கம் முயற்சிக்கும் நிலையில், பெயரை மாற்றுவதால் எந்த மாற்றமும் ஏற்படாது என ஒன்றிய வெளி யுறவுத்துறை அமைச் சர் ஜெய்சங்கர் தெரி வித்துள்ளார். மேலும் இந்திய-சீன எல்லைப் பகுதி யில் உள்ள இடங்களின் பெயர்களை மாற்ற முயற்சிக்கும் சீனாவின் செயலை இந்தியா கடுமையாகக் கண்டித்துள்ளது. இதுகுறித்து வெளியுறவு அமைச் சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ் வால் கூறுகையில், ‘இந்தியாவின் அரு ணாச்சலப்பிரதேச மாநிலத்தில் உள்ள இடங்களுக்கு பெயரிட சீனா பயனற்ற மற்றும் அபத்தமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இது எங்கள் கவனத்திற்கு வந்துள்ளது. இந்தியா அத்தகைய முயற்சிகளை முற்றிலுமாக நிராகரிக்கிறது என தெரிவித்துள்ளார். அருணாச்சலப் பிரதேசம் இந்தியா வின் ஒருங்கிணைந்த பகுதி என்ற மறுக்க முடியாத எதார்த்தத்தை இதுபோன்று புதிய பெயரை சூட்டுவதால் மாற்ற முடி யாது எனவும் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய் சங்கர், ‘அருணாச்சலப்பிரதேசம் நேற்று, இன்று, நாளை என எப்போதும் இந்தி யாவின் ஒரு மாநிலமாகும். அப்பகுதி யில் பெயரை மாற்றுவதால் எந்த மாற்றமும் ஏற்படாது’ என கூறியுள்ளார்.