states

img

திரிணாமுல் - பாஜக கள்ளக்கூட்டணி மீண்டும் அம்பலமானது

திரிணாமுல் - பாஜக கள்ளக்கூட்டணி மீண்டும் அம்பலமானது

ஒன்றிய அமைச்சர் - மம்தா பானர்ஜி இடையே திடீர் இணக்கம்

கொல்கத்தா பஹல்காம் தாக்குதல் மற்றும் “ஆபரே சன் சிந்தூர்” சம்பவங்களை உலகநாடுக ளுக்கு எடுத்துரைக்க மோடி அரசு 7 குழுக்களை அமைத்துள்ளது. பல கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.,க்கள் 7 குழுவிலும் இடம் பெற்றுள்ளனர். இந்த குழுவில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில், கிரிக்கெட் வீரராக இருந்து அரசியல்வாதியாக மாறிய யூசுப் பதானை ஒன்றிய அரசு நியமித்தது. ஆனால் மே 19ஆம் தேதி திரிணாமுல் காங்கி ரஸ் பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜி, “அனைத்துக் கட்சி பிரதிநிதிகளை அனுப்பும் அரசின் நடவடிக்கை வரவேற்கத்தக்கது. பாஜக அல்லாத கட்சிகள் என்று வரும்போது அனை த்துக் கட்சி பிரதிநிதிகளின் ஒரு பகுதியாக யாரை அனுப்புவது என்பதை பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு முடிவு செய்ய முடியாது. எங்கள் கட்சியிலிருந்து யார் செல்ல வேண்டும் என்பதை நாங்கள்தான் முடிவு செய்வோமே தவிர, ஒன்றிய அரசு அல்ல. அதனால் யூசுப் பதானோ அல்லது திரிணாமுல் காங்கிரஸின் வேறு எம்.பி.,க்கள் யாருமோ அனைத்துக் கட்சிக் குழுவில் இடம் பெற மாட்டார்கள்” என அவர் கூறினார்.

பாஜகவிடம் சரண்டர்

திடீரென 24 மணிநேரத்தில் பாஜகவைப் போல தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சி,”பயங்கரவாத அச்சுறுத்தலை எதிர்கொள்ள உலகம் ஒன்று பட வேண்டிய நேரத்தில் நமது கட்சியின் பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜி வெளிநாடுக ளுக்கான அனைத்துக் கட்சி குழுவில் இணை வது நம்பிக்கையையும் தெளிவையும் ஏற்படுத்து கிறது” என அறிக்கை வெளியிட்டது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் இந்த முடிவு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் ஒன்றிய நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு உடனான ஆலோ சனைக்குப் பிறகே மம்தா பானர்ஜி தனது நிலைப்பாட்டை மாற்றியுள்ளார். மே 20ஆம் தேதி அமைச்சர் கிரண் ரிஜிஜு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை தொடர்பு கொண்டு,”கண்டிப்பாக அனைத்துக் கட்சிக் குழுவில் இடம்பெற வேண்டும். அது தான் நல்லது” எனக் கூறியுள்ளார். இதன்பிறகே திரி ணாமுல் காங்கிரஸ் கட்சி தனது நிலைப் பாட்டை மாற்றியுள்ளது.

திரிணாமுல் கோரிக்கையை  மட்டும் ஏற்றது ஏன்?

ஆபரேசன் சிந்தூர்” வெளிநாட்டு விளக்கக் குழுவில் முன்னாள் ஒன்றிய அமைச்சர் ஆனந்த் சர்மா, எம்.பி.க்கள் கவுரவ் கோகோய், சையத்  நசீர் உசேன், ராஜா பிரார் ஆகியோர் கொண்ட  பட்டியலை காங்கிரஸ் கட்சி ஒன்றிய அரசிடம் அளித்தது.  ஆனால் ஒன்றிய அரசோ காங்கிரஸ் கட்சி அளித்த பட்டியலை புறக்கணித்து, திருவனந்த புரம் காங்கிரஸ் எம்.பி., சசி தரூர், அமர் சிங், மணீஷ் திவாரி ஆகியோரை குழுவில் சேர்த்துள் ளது. இதில் சசி தரூர் 5ஆவது குழுவின் தலைவ ராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. நாங்கள் கூறியது போல பட்டியலை மாற்றும் படி கோரிக்கை விடுத்தது. ஆனால் மோடி அரசு காங்கிரஸ் கட்சியின் கோரிக்கையை நிராக ரித்தது.  ஆனால் தற்போது மம்தா பானர்ஜியின் கோ ரிக்கையை ஏற்று முன்பு நியமித்த யூசப் பதானை நீக்கி, அவரது மருமகனை “ஆபரேசன் சிந்தூர்” வெளிநாட்டு விளக்கக் குழுவில் சேர்த் துள்ளது. இது இந்திய அரசியலில் கடும் சர்ச்சை யை ஏற்படுத்தியுள்ளது. அதே போல திரிணா முல் - பாஜக கள்ளக்கூட்டணி மீண்டும் அம்பல மாகியுள்ளது.

பாஜகவின் பெயரைக் குறிப்பிடாமல் அறிக்கை வெளியீடு சொந்த கட்சிக்குள்ளேயே திரிணாமுலுக்கு எதிர்ப்பு

வக்பு திருத்த சட்டம் தொடர்பாக முர்ஷிதாபாத் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங் ்களில் ஏப்ரல் 11ஆம் தேதி வன்முறை நிகழ்ந்தது. இந்த வன்முறைக்கு பாஜக -ஆர்எஸ்எஸ் குண்டர்கள் தான் காரணம் என்பது நாடறிந்த விஷயம். அதே போல வன்முறையை கட்டுப்படுத்துகிறோம் என்ற பெயரில்  திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் வன்முறையை தூண்டிவிட்டது நாட்டு மக்களுக்கு நன்றாகத் தெரியும்.  இத்தகைய சூழலில் மே 21ஆம் தேதி முர்ஷிதாபாத் வன்முறை தொடர்பாக ஆளும்  திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அறிக்கை வெளியிட்டது. அதில்,”முர்ஷிதாபாத் வன்முறைக்கு எதிர்க்கட்சி தான் காரணம்” என பாஜகவின் பெயரைக் குறிப்பிடாமல் அறிக்கை வெளியிட்டு இருப்பது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிகழ்வும் பாஜக - திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மறைமுக கூட்டணியை அம்பலப்படுத்துவதாக உள்ளது. மேலும் பாஜக பெயரை குறிப்பிடாமல் அறிக்கை வெளியிட்டு இருப்பது தொடர்பாக சொந்த கட்சிக் குள்ளேயே திரிணாமுலுக்கு எதிர்ப்புக் கிளம்பியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.