புதுதில்லி, பிப்.18- பால், அரிசி, கோதுமை மாவு, பருப்பு மற் றும் தானியங்கள் போன்ற மக்கள் தினசரி பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்களின் விலை கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 5 முதல் 15 சதவிகிதம் வரை உயர்ந்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. உள்நாட்டு உற்பத்தியில் ஏற்பட்டுள்ள சரிவு, ஏற்றுமதி தேவை அதிகரிப்பு, மொத்த கோதுமை இருப்பை ஆப்லோடிங் செய்வதில் இருக்கும் தாமதம் மற்றும் விநியோகத் தடை கள் ஆகியவை அத்தியாவசியப் பொருள் பற்றாக்குறையை உருவாக்கி இருப்பதாக வும், இதன்காரணமாக முக்கியப் பொருட்க ளின் விலைகள் தொடர்ந்து அதிகரித்து வரு வதாக சில்லரை விற்பனையாளர்கள் கூறு கின்றனர். பால் விலை மட்டும் கடந்த 15 மாதங்களில் 14 சதவிகிதம் அளவிற்கு உயர்ந்துள்ளது. இதன் மூலம் பாலினை நுகரும் மக்களின் எண்ணிக்கை கணிசமாக குறையும் என்று இந்தியப் பால் சங்கத்தின் தலைவரும், அமுல் நிறுவனத்திற்குச் சொந்தமான குஜராத் கூட்டு றவு பால் மார்கெட்டிங் கூட்டமைப்பின் முன் னாள் நிர்வாக இயக்குநருமான ஆர்.எஸ். சோதி தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு உற்பத்தி வீழ்ச்சி மற்றும் ஏற்று மதித் தேவை அதிகரிப்பு ஆகியவற்றால், கடந்த ஒரு மாதத்தில் பாசுமதி மற்றும் பாசுமதி அல் லாத அரிசியின் விலைகள் 10 முதல் 15 சதவிகி தம் அதிகரித்துள்ளன. இதற்கு முக்கியக் கார ணமாகப் பாகிஸ்தான் நாட்டின் அரிசி உற்பத்தி யில் ஏற்பட்ட பாதிப்பு இந்திய பாசுமதி அரிசிக் கான வலுவான ஏற்றுமதி தேவையை உரு வாக்கி, அது பாசுமதி அரிசிக்கான விலை உயர்வில் முடிந்துள்ளதாக கூறப்படுகிறது. பொதுவாக விற்பனை பொருட்களின் விலையில், தாங்கக் கூடிய அளவு என ஒன்று இருக்கும். ஆனால், இந்த தாங்கக் கூடிய அளவீட்டைத் தாண்டி பொருட்களின் விலை உயரும் போது, அதன் தாக்கம் அந்தப் பொருட் களின் விற்பனை விலையில், கடுமையான விலை உயர்வாக எதிரொலிக்கும். அந்த வகையில், கடந்த ஒரு மாதத்தில் பால், அரிசி, கோதுமை மாவு, பருப்பு மற்றும் தானியங்களின் விலையில் ஏற்பட்ட மாற்றம் பொருட்களின் விற்பனை விலையில் எதிரொ லிக்கத் துவங்கியுள்ளதாக சில்லரை விற்பனை யாளர்கள் கூறுகின்றனர். அடுத்த சில வாரத்தில் பிற அத்தியாவசியமான நுகர்வோர் பொருட் களின் விலை இன்னும் மோசமான அளவிற்கு அதிகரிக்கலாம் என்றும் அவர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
ரிசர்வ் வங்கியின் வட்டி விகித உயர்வா லும், உற்பத்தி பொருட்களின் விலை உயர்வா லும், நுகர்வோர் விலை பணவீக்கம் எனப்படும் இந்தியாவின் சில்லரைப் பணவீக்கம், 2022 டிசம்பரில் 5.72 சதவிகிதமாக இருந்தது- 2023 ஜனவரியில் 6.52 சதவிகிதமாக உயர்ந்துள்ள தையும் அவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். சில்லரை விலைப் பணவீக்கத்திலும், சுமார் 40 சதவிகிதம் அளவிற்கு உணவு விலை பண வீக்கமே பங்கு வகிக்கிறது. இந்த உணவு விலைப் பணவீக்கம் அல்லது விலைவாசி உயர்வு 2022 டிசம்பரில் 4.19 சதவிகிதமாக இருந்தது, 2023 ஜனவரியில் 5.94 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. இதற்கு முக்கியமான கார ணம் தானியங்கள், பால், கோதுமை, அரிசி மற்றும் காய்கறிகள் ஆகியவற்றின் விலைவாசி அதிகரித்துள்ளதே ஆகும். குறிப்பாக, தானிய வகைகள் மீதான பண வீக்கம் டிசம்பரில் 13.79 சதவிகிதமாக இருந்த நிலையில் 2023 ஜனவரியில் 16.12 சதவிகித மாக அதிகரித்துள்ளது. இந்திய விற்பனைச் சந்தையில் புதிய பயிர் வரத்து அதிகமாக இருந்தாலும், பருப்பு போன்ற முக்கியப் பொருட்களின் விலை 10 சதவிகிதம் முதல் 15 சத விகிதம் வரை அதிகரித்துள்ளன. இந்த ஆண்டு உற்பத்தியில் பெரிய அள வில் வீழ்ச்சி ஏற்படும் என வர்த்தகர்கள் எதிர் பார்க்கும் துவரம் பருப்பு விலை தற்போதே அதிகரித்துள்ளதாக பருப்பு இறக்குமதியா ளர்கள் கூறுகின்றனர். இந்த விலைவாசி உயர்வானது, தற்போது ஆரம்பக் கட்டத்திலேயே இருக்கும் நிலை யில், வரும் மாதங்களில் இது மோசமான நிலையை அடையலாம் என்றும், உணவுப் பொருட்களுக்கான இறக்குமதி வரிகளைக் குறைப்பது மற்றும் பெட்ரோல், டீசல் போன்ற வற்றின் மீதான வரிகளைக் குறைப்பதன் மூலம் இந்த உணவுப் பொருட்களின் விலைவாசி உயர்வை குறைக்க முடியும் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.