கொல்கத்தா, அக்.21- டெட் (ஆசிரியர் தகுதித் தேர்வில்) நடந்த ஊழலைக் கண்டித்து கொல்கத்தாவில் போராட்டம் நடத்திய பலர் வியாழன் இரவு கைது செய்யப்பட்ட னர். கைதைக் கண்டித்து இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கொல்கத்தாவில் வெள்ளியன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பலாஷ் தாஸ், சயந்தீப் மித்ரா, மினாக்ஷி முகர்ஜி உட்பட ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர்.