states

img

பெயரைக் கேட்டாலே போதும்... தரம்(!) எளிதில் விளங்கும்

பெயரைக் கேட்டாலே போதும், தரம்(கேவலம்!) எளிதில் விளங்கும் என்பார்களே, அது வேதாந்தா நிறு வனத்துக்குப் பொருந்தும். தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு ஒன்றே அது எவ்வளவு மோசமான நிறு வனம் என்று விளக்கிவிடும். இது அர சுக்கு அழுத்தம் கொடுத்து, தனக்கு  வேண்டியபடி அரசின் கொள்கை களிலேயே மாற்றம் செய்கிற “அப்பா டக்கர்” கம்பெனி. ஸ்டெர்லைட் ஆலை  பற்றிய அரசின் அணுகுமுறை யிலேயே இது புரியும். இந்த நிறுவனத்தின் துணை நிறுவனமான கெய்ர்ன் இந்தியா என்  பது எண்ணெய் வணிகத்தில் உள்ளது.  எண்ணெய் எடுக்க கிணறு தோண்டு வது குறித்து மக்களின் கருத்துக் கேட்கப்படும் நடைமுறையையே ரத்து செய்ய வைத்தது இந்த நிறுவனம். அப்படி மக்களின் கருத்துக்கே இடமளிக்காமல், மக்களின் எதிர்ப்பு இருந்தபோதும் ராஜஸ்தானில் 6 எண்ணெய்க் கிணறு திட்டங்களுக்கு அனுமதி பெற்றது இந்த நிறுவனம். இவை தவிர மத்தியப் புலனாய்வுத் துறை, அமலாக்கத்துறை போன்ற வற்றின் ரெய்டுகள் இந்த நிறு வனத்திற்குத் தண்ணீர் பட்ட பாடு! ஆனாலும், “எங்க அண்ணன் பஸ்சில கம்பியே பிடிக்காம ஆணி அடிச்சாப் பல நிப்பாரு” என்று சொன்ன மாதிரி,  அசைக்க முயாமல் நிற்கிறது வேதாந்தா. காரணங்களுள் ஒன்று, 2019இலிருந்து 2022 வரை மட்டும் தேர்தல் பத்திரங்களாக மட்டும் இந்த  நிறுவனம் பாஜகவிற்கு அளித்துள்ள நிதி ரூ.229.15 கோடி. அடுத்த ஆண்டில் ரூ.1 கோடிக்குத் தேர்தல் பத்தி ரங்களை பாஜகவுக்கு வழங்கியுள் ளது. வேறு எந்த வழிகளில் எவ்வளவு தரப்பட்டுள்ளது என்று நமக்குத் தெரியாது. ஆனால், இந்த நிறுவனம் விரும்பியதெல்லாம் நடக்கிற அள வுக்கு பாஜகவுக்கு நிதி தருகிறது என்பது மட்டும் ஊரறிந்த ரகசியமாக இருக்கிறது.