states

img

மோடி அரசாங்கத்தில் நடந்த முறைகேடுகளை அறிக்கைகளாக வெளியிட்டவர்கள் - பந்தாடப்பட்ட தணிக்கை அதிகாரிகள்

மழைக்கால நாடாளுமன்ற கூட்டத்தொடரின் இறுதி நாளான ஆகஸ்ட் 12 அன்று  12 துறைகள் சார்ந்த ஆய்வறிக்கை யை மத்திய தணிக்கை குழு  சமர்ப்பித்தது. அந்த அறிக்கையின்  படி, துவாரகா விரைவுச்சாலை திட்டத்தில் கிலோ மீட்டர் ரூ.250 கோடிக்கு சாலை அமைத்ததாக நடந்த மெகா ஊழல், பிரதம மந்திரி  காப்பீடு திட்டமான ஆயுஷ்மான் திட்டத்தில் இறந்தவர்கள் பெய ரிலும் கூட காப்பீடு வழங்கப்பட்டது  உள்ளிட்ட மோடி அரசின் பல்வேறு  ஊழல் முறைகேடுகள் வெளிச்சத் திற்கு வந்தன. அவர்கள் சமர்ப்பித்த 12 அறிக் கைகளின் வாயிலாக மிகப்பெரிய  ஊழல் குற்றச்சாட்டுக்களை வெளிப்படுத்திய உயர் அதிகாரி களை செப்டம்பர் 12 அன்று மோடி  அரசாங்கம் பணி இடமாறுதல் செய்  திருக்கிறது. அதூர்வ சின்ஹா, மத்திய தணிக்கை துறையில் முதன்மை இயக்குனர் (கட்டமைப்பு வசதிகள்  தணிக்கை) பொறுப்பில் இருந்த வர்.  இவர் இந்த பொறுப்புக்கு மார்ச்  2023 இல் தான் வந்தார். அவரை தற் போது கேரளாவின் கணக்காளர் ஜெனரலாக (A&E) நியமித்து இருக்கிறது.  துவாரகா விரைவுச்  சாலைத் திட்டத்தில் அதிகப்படி யான செலவுகளைக் கண்டறிந்து, ஹரியானா பகுதியில் உயர்த்தப்  பட்ட பாதையைத் தேர்வுசெய்யும்  இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் (NHAI) உத்தரவை  மீறி ஒரு கிலோமீட்டருக்கு ரூ. 250.77 கோடியாக செலவுத் தொகை  திட்டமிட்டு உயர்த்தப்பட்டது என்று  அறிக்கை கூறியது. இது மிகப் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத் திய நிலையில் இந்த பணியிட மாற்றம், அரசாங்கத்தின் மீது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. தத்தா பிரசாத் சூர்யகாந்த், மத்திய இயக்குநர் (ஏஎம்ஜி II), தணிக்கைத் தலைமை இயக்குநர் - மத்திய செலவினங்கள் பொறுப்  பில் இருந்தவர்.  

இந்த பொறுப்பில்  இருக்கும்போது தான் மோடி அரசாங்கத்தின் ஆயுஷ்மான் பாரத்- பிரதான் மந்திரி ஜன் ஆரோக்யா  யோஜனா – சுகாதாரத் திட்டத்தில் நடந்த முறைகேடுகளை - குறிப்  பாக, இறந்தவர்கள் பெயரிலும் காப்பீடு வழங்கப்பட்டது, ஒரே செல் எண்ணில் பல லட்சக்கணக்கான  நபர்களின் குறிப்பு என்று முறை கேடுகள் நடந்திருப்பதை வெளிக் கொணர்ந்தார்.  இவர் இப்போது, அதே இடத்தில் அங்கே இருக்கும் காலியாக இருந்த இயக்குனர் – சட்டம் என்ற பொறுப்பிற்கு மாற் றப்பட்டு இருக்கிறார். அசோக் சின்ஹா, இயக்குநர் ஜெனரல் (வட மத்திய மண்டலம்) பொறுப்பில் இருந்து இயக்குனர் (தேசிய மொழிகள்) துறைக்கு மாற்றப்பட்டு இருக்கிறார்.  இவரும்  மோடி அரசாங்கத்தின் ஆயுஷ்மான்  பாரத்-பிரதான் மந்திரி ஜன்  ஆரோக்யா யோஜனா – சுகாதாரத்  திட்டத்தில் நடந்த முறைகேடுகளை வெளிக்கொணர்ந்ததில் முக்கியப் பங்கு வகித்தார்.  இவரை இப்  போது அதே இடத்தில் அங்கே இருக்கும் காலியாக இருந்த இயக்குனர் – சட்டம் என்ற பொறுப்  பிற்கு மாற்றப்பட்டு இருக்கிறார். இவர்கள், தணிக்கைத் துறை யில் தங்கள் வழக்கமான பணி யைத்தான் செய்தார்கள். அந்தப் பணியின் வாயிலாகவே, ஊழல் வெளியில் வந்தது. விசாரணை அமைப்புக்கள் அனைத்தையும் தன் கைக ளுக்குள்ளே வைத்துக்கொண்டு எதிர்க்கட்சியினர் மீது பொய்யான புகார்களைப் புனைவதையும்,  தேவையற்ற நடவடிக்கைகள் எடுத்து மிரட்டுவதையும் வாடிக் கையாக கொண்டிருக்கும் மோடி அரசு, மத்திய தணிக்கை துறை கொடுத்திருக்கும் அறிக்கை மீதான நடவடிக்கையில் இருந்து தப்பிக் கப் பார்க்கிறது.  அதன் ஒரு பகுதிதான் இந்த இடமாற்றங்கள் எனத் தெரிகிறது. தொகுப்பு: ஆர்.எம்.பாபு