தேசத்தின் உண்மையான கதாநாயகர்கள் இவர்கள். இந்தியர்கள் ஒன்றுபட்டு நின்றால் “இந்தியா” மகத்தான வெற்றி பெறும் என்பதற்கு இது ஓர் உதாரணம். ‘எலி வளை’ அமைத்து 18 மீட்டர் தூரம் சுரங்கத்திற்குள் மூடிய மண்ணில் துளையிட்டு, 28 மணி நேரத்திற்குள்ளாக 41 தொழிலாளர்களை மீட்டு வந்த குழுவின் தலைவர் வாஹீக் ஹசன். உத்தரகண்ட் சுரங்கத்தில் சிக்கியிருந்த 41 தொழிலாளர்களையும் பாதுகாப்பாக மீட்ட இந்த எலி வளை சுரங்கத் தொழிலாளர்கள் மத பேதமின்றி சக தொழிலாளர்களை தங்களது உயிரையும் பணயம் வைத்து மீட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு எனது வணக்கத்தை உரித்தாக்குகிறேன். 17 நாட்கள் நடந்த இந்த ஜீவ மரணப் போராட்டம், தொழிலாளர் வர்க்கத்தின் பாதுகாப்பு பல திட்டங்களில் கேள்விக்குறியாக நிற்கிறது என்பதை அம்பலப்படுத்துகிறது.