states

நாடு முழுவதும் 10 லட்சம் மின்வாகனம் இயக்கப்படுகிறது

புதுதில்லி, ஏப்.1- நாடு முழுவதும் 10 லட்சம் மின் சார வாகனங்கள் இயக்கப்படு கின்றன என்று ஒன்றிய சாலைப் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.  மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற நாளிலிருந்து பெட்ரோல், டீசல், எரிவாயு விலை களை உயர்த்தி வருகிறது. இத னால் வாகன ஓட்டிகளும் மக்களும் அவதிப்பட்டு வருகின்றனர். மக்  கள் அவதிப்படுவது குறித்து கொஞ்சம் கூட கவலைப்படாமல் பிரதமர் மோடி உள்ளார் என்று அரசியல் கட்சியினரும் பொதுமக்களும் கடுமையாக குற்றம்சாட்டுகின்ற னர். எரிபொருள் விலையை குறைக்காமல், மின்சார வாக னங்களை செயல்பாட்டுக்கு கொண்டு வரும் முடிவை அரசு எடுத்துள்ளது.அந்த வகையில், இரு சக்கர மற்றும் 4 சக்கர வாக னங்கள் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளன.  இந்நிலையில் ஒன்றிய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்காரி மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதி லில், கடந்த மார்ச் 25 ஆம் தேதி வரையில் நாடு முழுவதும் 10 லட் சத்திற்கும் மேற்பட்ட (10,76,420)  மின்சார வாகனங்கள் இயங்கி வரு கின்றன. அந்த மின்சார வாக னங்கள் இயங்குவதற்கு தேவை யான மின்சாரம் கிடைக்க செய்யும் வகையில் நாடு முழுவதும் பொது இடங்களில் 1,742 சார்ஜிங் நிலை யங்கள் உள்ளன. நாட்டில் மின்  வாகன செயல்பாட்டை முடுக்கி விடும் வகையில், மின்சார வாக னங்களுக்கான சார்ஜிங் உட்கட்ட மைப்பு பற்றிய திருத்தப்பட்ட வழி முறைகள் மற்றும் தரநிலைகளை கடந்த ஜனவரி 14 அன்று ஒன்றிய ஆற்றல் துறை அமைச்சகம் வெளி யிட்டுள்ளது என்று தெரிவித்துள் ளார்.