states

img

ஒன்பதாண்டு ஆட்சியின் துயரங்களும் தில்லுமுல்லுகளும் - க.உதயகுமார்

பிரகலா பிரபாகர் நமது நாட்டின் நிதி யமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவர் ஆவார். இவர் மிகச்சிறந்த பொரு ளாதார நிபுணர். இலக்கியவாதி, அரசியல் விமர்சகர், சமூக விஞ்ஞானி. மொத்தத்தில் இந்தியாவைப் பற்றியும், இந்தியாவின் பொருளாதாரம் பற்றியும், இந்தியாவின் எதிர்காலம் பற்றியும் மிகவும் கவலைப் படக்கூடிய ஒரு சிறந்த மனிதாபிமானி. இவர் கருத்துக்களுடன் நாம் அனைத்து விதத்திலும் ஒன்று சேர முடியாது என்ற போதிலும் சமீபத்தில் இவர் எழுதி வெளி வந்துள்ள “The Crooked Timber of New India” - அதாவது “புதிய இந்தியாவின் வளைந்த மரம்” என்ற புத்தகம் பிஜேபி க்கு எதிராக பெரும் புயலை கிளப்பி வரு கிறது. குறிப்பாக ஒன்பது வருட மோடி  ஆட்சியில் மக்கள் எத்தகைய துன்ப துய ரங்களை அனுபவித்து வருகிறார்கள் என்பதை துல்லியமாக புள்ளி விவரங்களு டன் அலசக்கூடிய இந்தப் புத்தகம் தமிழில் அடுத்த மாதம் வர இருக்கிறது. சமீபத்தில் இந்த ஆங்கில புத்தகத்தின் அறிமுக விழா ஒன்று ரோஜா முத்தையா ஆராய்ச்சி மையத்தில் பத்திரிகையாளர் என்.ராம் தலைமையில் நடைபெற்றது. புத்தகத்திலிருந்து ஏராளமான கேள்வி களை எழுப்பிய என்.ராம் பிரகலா பிரபா கரிடம் இருந்து நேரடியாக அதற்கான பதிலையும் கேட்டு பெற்று நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் அவற்றை வெளிப்படுத்தினார். 

நிர்மலா சீதாராமன், நிதி அமைச்ச ராக உள்ள இந்த பிஜேபி அரசாங்கம் மேற்கொண்டு வரும் அனைத்து நட வடிக்கைகளும் எவ்வாறு தோல்வியில் முடிந்துள்ளன. மக்கள் எத்தகைய சொல்லொணா  துயரத்துக்கு ஆளாக்கப் பட்டிருக்கிறார்கள். இவர்களை திசை திருப்ப பிஜேபி எப்படி எல்லாம் வகுப்பு வாத வெறியை தூண்டி வருகிறது என்பதை மிகவும் ஆதாரப்பூர்வமாக எடுத்து உரைக்கிறார் பிரகலா பிரபாகர். போகிற போக்கில் அரசியலுக்காக கருத்துக்களை கூறாமல், புள்ளி விவரங்களைத் தந்து ஆதாரப்பூர்வமாக பிஜேபி அரசாங்கம் ஒவ்வொரு விஷயத்திலும் எவ்வாறு தோல்வியை தழுவி வருகிறது என்பதை புட்டுப் புட்டு வைக்கிறார். குறிப்பாக பிஜேபி ஆட்சிக்கு வந்த பின்னர் இந்தியாவில் ஏழைகள் பெருகி உள்ள னர் என்பதை ஆதாரத்தோடு விளக்கு கிறார். அத்துடன் இரண்டு கோடி பேருக்கு ஆண்டுதோறும் வேலை வழங்குவதாக பிஜேபி உறுதி அளித்து இருந்த நிலை யில் தற்போது பிஜேபி அரசாங்கம்  ஆட்சி  பொறுப்பு ஏற்ற பிறகு வேலைவாய்ப்பு எப்படி குறைந்து கொண்டே வருகிறது என்பதை புள்ளி விவரங்களுடன் விளக்குகிறார். 

பொருளாதார விஷயங்கள் அனைத்தி லும் தோல்வியை தழுவிக் கொண்டிருக் கும் பிஜேபி எப்படி மகாராஷ்டிராவில் ஆட்சியை காப்பாற்ற சிவசேனா எம்எல்ஏக்களுக்கு கோடி கோடியாக பணத்தை அள்ளித் தந்தது என்பதையும் விலாவாரியாக சுட்டிக்காட்டுகிறார். எதிர்க்கட்சிகள் மற்றும் ஊடகங்களின் குரல் வளைகளை நெரிக்க எவ்வாறு சிபிஐ, இடி (ED) போன்ற அரசின் எந்திரங் கள் எவ்வாறு துஷ்பிரயோகம் செய்யப் படுகிறது என்பதை விவரங்களுடன் அலசு கிறார். எதிர்க்கட்சிகளின் தலைவர்களின் உரையாடல்களை ஒட்டு கேட்பதற்காக பெகாசஸ் என்ற உளவு மென்பொருளை இஸ்ரேலில் இருந்து வாங்கியது சம்பந்த மாக அமைக்கப்பட்ட விசாரணை நட வடிக்கை எவ்வாறு காலாவதியானது என்ற  கேள்வி எழுப்புகிறார்?. முஸ்லிம்களை கொல்லுவோம்; ஜெய் ஸ்ரீ ராம் கோஷத்தை சொல்லாவிட்டால் இந்த நாட்டில் வாழ உரிமை இல்லை என்று கத்தித் திரியும் பிஜேபி தலைவர்கள் மீது  எந்தவித நடவடிக்கையும் எடுக்காத பிஜேபி அரசு பற்றி கோபத்துடன் கேள்விக்கணைகளை தொடுக்கிறார். சமூக ஊடகங்கள் அனைத்தையும் தங்கள்  கட்டுப்பாட்டில் வைத்துள்ள பிஜேபி அதன் மூலம் எவ்வாறு ஒரு பொய் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது என்பதை அம்பலப்படுத்துகிறார். உண்மையான கருத்துக்களை கூறும் எதிர்க்கட்சிகள் மீது, அவர்களின் சமூக வலைதளங்கள் மீது எவ்வாறு புனையப்பட்ட வழக்குகள் பதியப்படுகின்றன என்பதையும் ஆதாரங்களுடன் விளக்குகிறார்.  

தேர்தல் பத்திரங்கள் என்ற பெயரில் 5270 கோடி ரூபாய் கார்ப்பரேட் முதலாளி யிடம் பெற்ற ஒரே கட்சி பிஜேபி என்பதை கூறும்,  இவர் இந்த அக்கிரமங்களை கண்டிக்க உச்ச நீதிமன்றம் கூட தயாராக இல்லை என்பதை வருத்தத்துடன் சுட்டிக் காட்டுகிறார். முஸ்லிம்களும் கிறிஸ்த வர்களும் இந்தியாவில் அதிகமாகிக் கொண்டே இருக்கின்றனர் இந்துக்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதனால் முஸ்லிம்கள் இந்துக்களை விட அதிகமான எண்ணிக்கையில் இருக்கக் கூடும் என்ற பொய்யான வாதங்களை கடந்த 70, 80 ஆண்டுகளாக மேற் கொண்டு வரும் பிஜேபி மற்றும் சங்க பரி வார் அமைப்புக்களின் கூற்றுக்களை தவிடு பொடியாக்கும் விதத்தில் - உண்மை அது அல்ல;  சமீபத்திய புள்ளி விவரங்கள் என்ன கூறுகின்றன என்று இவர்கள் பொய் களை அம்பலப்படுத்தி உண்மை விவ ரங்களை  துல்லியமாகச் சுட்டிக்காட்டுகிறார்.  தொடர்ந்து குஜராத்தில் பிஜேபி வெற்றி வாகை சூடி வரக்கூடிய பின்னணி பற்றி  ஆராய்வதற்காக குஜராத் மக்களிடம் விரி வான ஒரு உரையாடலை இவர் நேரடி யாக சென்று நிகழ்த்தி உள்ளார். குஜராத் மாடல், எவ்வாறு ஒரு பொய்யான மாடல் என்பதை மக்களுக்கு எடுத்துச் சொல்லி சாலை வசதிகள், கல்வி வசதி, சுகாதார வசதி என அனைத்திலும் மாநிலம் பின்தங்கி யுள்ளது என்ற நிலைமைகளை சுட்டிக் காட்டி, அவர் நீங்கள் எதற்காக குஜ ராத் அரசாங்கத்தை ஆதரிக்கிறீர்கள் என்று  கேட்டபோது அவர்களிடம் தெளிவான பதில் இல்லை.  அரசாங்கம் சொல்லக் கூடிய விளம்பர கோஷங்களையே அவர்கள் முன்வைக்கின்றனர். கடைசி யில் அவர்கள் முன்வைக்கும் ஒரு பயங்கர மான விஷயம் என்னவென்றால் பிஜேபி அரசால் தான் முஸ்லிம்களை ஒழிக்க முடி யும்;  அவர்கள் கொட்டத்தை அடக்க முடி யும் என்ற ஒரு பொய்யான பிம்பத்தை அவர்கள் அப்படியே ஏற்றுக் கொள்கிறார் கள் என்பதை பார்க்க முடிகிறது. இது உண்மையில் மிகவும் துயரமான விஷயமாகும். 

பொதுத்துறைகளை விற்பதை சீர்திருத்தம் என்று கூறும் பிஜேபி ஆட்சி யாளர்களின் கூற்றை நையாண்டி செய்யும் பிரகலா பிரபாகர் இது நாட்டை மிகவும் அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்லும் என்பதை சுட்டிக் காட்டுகிறார். ஸ்டேன் சுவாமி பிரச்சனையில் இந்த பிஜேபி அர சாங்கம் எவ்வளவு கொடூரமாக நடந்து கொண்டது. தேசம் தழுவிய விவசாயிகள் போராட்டத்தில், அந்தப் போராட்டத்தை சீர்குலைக்க பிஜேபி என்னவெல்லாம் செய்தது என்பதை இந்த புத்தகத்தில் விரிவாக விளக்குகிறார்.          கடந்த 9 ஆண்டுகால பிஜேபி ஆட்சி யின் அனைத்து அம்சங்களையும் அவற்றின் போலி பிரச்சாரத்தையும் சுக்கு  நூறாக்குகிறார் இந்த புத்தகத்தில் பிரகலா பிரபாகர். அனைவரும் வாங்கி படிக்க வேண்டிய புத்தகம் இது. அடுத்த மாதம் தமிழில் வெளிவர இருக்கிறது. விஜய்  சங்கர்,  பிரண்ட்லைன் முன்னாள் ஆசிரியர்  இந்த மொழிபெயர்ப்பு பணியை செய்து  கொண்டிருக்கிறார். விரைவில் நாம் அனை வரும் இந்த புத்தகத்தை படிக்கலாம்.