ஐ.நா.சபை: ஐநா உலக உணவுத் திட்ட (WFP) அமைப்பு, போதுமான நிதி இல்லை என, இந்த மாதம் 20 லட்சம் ஆப்கானியர்களுக்கான ‘ரேஷன் பொருட்களை வெட்ட உள்ளது. இந்த நிதி வெட்டால் பேரழிவு அபாயம் உருவாகியுள்ளது. நிதிப் பற்றாக்குறையால் ஐ.நா வின் இத்திட்டம் 25 சதவீத அள விலான நிதி பங்களிப்புடன் செயல் பட்டு வந்தது.தற்போது நிதிப் பற்றாக் குறையை காரணம் காட்டி ரேஷன் பொருட்களை வெட்டுவது ஆப்கானி யர்களை மேலும் வறுமையில் தள்ளும். மேலும் ஐநா இந்த ஆண்டு முழுவதும் 1 கோடி ஆப்கானியர்க ளுக்கான உணவு உதவியை வெட்ட உள்ளது. நிதியுதவி கிடைக்கவில்லை எனில், தொலைதூர கிராமப் பகுதிக ளுக்கான 90 சதவீத உணவுப் பொருட் கள் விநியோகம் துண்டிக்கப்படும்; குளிர்காலத்தில் தொடர்பு இல்லாத பகுதிகளுக்கு உணவு பொருட்கள் விநியோகம் நிறுத்தப்படும் என்றும் ஐநா உலக உணவுத் திட்ட அமைப்பு கூறியுள்ளது. பயணம் செய்து போகக் கூடிய பகுதிகளில் கூட, கடுமையான வானிலையின் போது மக்களுக்கு எந்தப் பொருட்களும் வழங்க இயலாது எனவும் இந்த பேரழிவை தவிர்க்க வேண்டும் என்றும் ஐநா உலக உணவுத் திட்டத்தின் ஆப்கா னிஸ்தான் இயக்குனர் ஷியோ-வீ லீ தெரிவித்துள்ளார். தலிபான்களிடம் இருந்து பாது காக்கிறோம் எனக் கூறி ஆப்கா னிஸ்தானில் ராணுவத்தை இறக்கி அந்நாட்டை அழித்து மீண்டும் தலி பான்களிடமே அமெரிக்கா விட்டுச் சென்றது. இதனால் ஏற்பட்ட பொரு ளாதாரச் சிதைவு காரணமாக ஆப்கா னிஸ்தானின் 75 சதவீத மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையிலான உதவி தேவைப்படுகிறது.
அமெரிக்காவில் உள்ள ஆப்கன் மத்திய வங்கியின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. பெண்கள் மீதான தலிபான்களின் கட்டுப்பா டுகள் அந்நாட்டினருக்கு முறையான அங்கீகாரத்திற்கு தடையாக உள்ளது. இதுவே பல ஆண்டு களாக அரசாங்க நிதியின் முதுகெ லும்பாக இருந்த உதவித் திட்டங் களை வெட்டவும் மற்றும் உதவி செய்த நாடுகள் விலகி செல்லவும் காரணமாக உள்ளது எனக் கூறிய லீ, இறுதியில் உதவி தேவைப்படு பவர்களைப் பற்றி மட்டுமே நாம் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறினார். முப்பது லட்சம் மக்களுக்கு இப்போது உணவு உதவி வழங்கப் படுகிறது. ஆனால் அக்டோபர் மாதத்திற்கு பிறகு அவர்களுக்கு உதவி கிடைக்காமல் போகலாம். மார்ச் வரை திட்டமிடப்பட்ட திட்டங்க ளை நிறைவேற்றுவதற்கு 100 கோடி அமெரிக்க டாலர் நிதி ஐநா உலக உணவுத் திட்ட அமைப்பிற்கு தேவைப்படுகிறது. இதனால் ஆப்கானிஸ்தானில் உதவி பெற்று வாழ்ந்து வரும் மக்க ளின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.