புதுதில்லி, ஆக. 4 - குற்றவியல் அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறைத் தண்டனையை நிறுத்தி வைத்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு அதிகபட்ச தண்டனையை வழங்கியுள்ள விசாரணை நீதிமன்ற நீதிபதி அதற் கான காரணத்தை குறிப்பிடவில்லை என்பதுடன், 2 ஆண்டு சிறைத் தண்டனையால், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி ராகுல் காந்தி மட்டு மன்றி, அவரைத் தேர்ந்தெடுத்த வாக்கா ளர்களின் உரிமையும் பாதிக்கப்படு கிறது என்பதையும் கருத்தில் கொண்டு இந்த இடைக்கால உத்தரவைப் பிறப் பிப்பதாக நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர். பி.ஆர். கவாய், பி.எஸ். நரசிம்மா மற்றும் சஞ்சய் குமார் அடங்கிய அமர்வு பிறப்பித்துள்ள இந்த உத்தரவு மூலம், ராகுல் காந்தியின் எம்.பி. பதவி தக்க வைக்கப்பட்டுள்ளது மட்டுமன்றி, அவர் நடப்பு மழைக்காலக் கூட்டத் தொடரிலேயே நாடாளுமன்ற விவாதங் களில் கலந்துகொள்வதற்கான சூழலும் ஏற்பட்டுள்ளது. ராகுல்காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், அதுகுறித்து உடனடியாக மக்களவை சபாநாயகருக்கு கடிதம் எழுதப்படும் என்றும், கடிதம் உட னடியாக ஏற்கப்பட்டால் வரும் திங்கட்கிழ மையே ராகுல் காந்தி நாடாளுமன்ற நடவடிக்கைகளில் கலந்து கொள்வார் என்றும் காங்கிரஸ் கட்சியின் மக்கள வைக் குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்த இந்த வழக்கை ஆகஸ்ட் 4-ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்திருந்தது. அதற்குள் பிரமாணப் பத்திரங்களைத் தாக்கல் செய்யுமாறும் உத்தர விட்டிருந்தது. அதனடிப்படையில் பிர மாணப் பத்திரம் தாக்கல் செய்த ராகுல் காந்தி, “அவதூறு வழக்கில் நான் குற்றவாளி இல்லை. நான் பேசியதில் எந்தத் தவறு இல்லை என்பதால் மன்னி ப்பு கோர முடியாது. மன்னிப்பு கேட்க வேண்டும் என்றால் முன்னதாகவே செய்திருப்பேன். எனவே, எனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ய வேண்டும். நாடாளுமன்றக் கூட்ட த்தொடரில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும்” என தெரிவித்திருந்தார். அதே போல “ராகுல் காந்தி அவரது பேச்சு க்கு எந்த வருத்தமும் தெரிவிக்க வில்லை. அவர் மன்னிப்பு எதுவும் கோரவில்லை என்பதால் அவரது தண்டனையை உறுதி செய்ய வேண்டும் என்று அவர் மீது வழக்கு தொடுத்திருந்த பாஜக எம்எல்ஏ புர்ணேஷ் மோடி தனது பிரமாணப் பத்திரத்தில் வலியுறுத்தியிருந்தார். இந்நிலையில், பி.ஆர். கவாய், பி.எஸ். நரசிம்மா மற்றும் சஞ்சய் குமார் அடங்கிய அமர்வு முன்பு வெள்ளிக்கிழ மையன்று வழக்கு விசாரணைக்கு வந்தது. ராகுல் காந்தி தரப்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி-யும், பூர்ணேஷ் மோடி தரப்பில் மகேஷ் ஜெத்மலானியும், ஒன்றிய அரசுத் தரப்பில் சொலிசிட்டர் துஷார் மேத்தா வும் ஆஜராகி வாதங்களை வைத்தனர்.
தீர்ப்பு விபரம்
அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட பி.ஆர். கவாய் தலைமையிலான அமர்வு, தனது தீர்ப்பை வழங்கியது. அதில், ராகுல் காந்திக்கு வழங்கப்பட்ட 2 ஆண்டு சிறைத்தண்டனை நிறுத்தி வைப்பதாக அறிவித்தது. “விசாரணை நீதிமன்றம் வழங்கிய உத்தரவின் (2 ஆண்டு சிறைத்தண்ட னை) விளைவுகள் அதிகபட்சமாக உள்ளது. அந்த தீர்ப்பு ராகுல் காந்தி பொது வாழ்வில் தொடர்வதற்கான உரி மையை மட்டுமின்றி, அவரைத் தேர்ந்தெடுத்த வாக்காளர்களையும் பாதித்துள்ளது. ராகுல் காந்தி வழக்கில் அதிகபட்ச தண்டனையாக 2 ஆண்டு கள் சிறை தண்டனை விதித்தது ஏன் என்பதற்கு தீர்ப்பளித்த நீதிபதி எந்த காரணத்தையும் கூறவில்லை. தண்ட னை காலத்தை இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு நாள் குறைவாக தந்திருந்தாலும் அவர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்திருக்க மாட்டார். எனவே, இறுதி தீர்ப்பு வரும் வரையில் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை நிறுத்தி வைக்கப்படுகிறது” என்று தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.
ராகுலுக்கு அறிவுரை
“ராகுல் காந்தியின் உரை நல்ல ரசனையுடன் இல்லை என்பதில் சந்தேக மில்லை” என்பதையும் தீர்ப்பில் சுட்டிக் காட்டியிருக்கும் உச்ச நீதிமன்றம், “பொது வாழ்வில் இருப்பவர்கள் பொது வெளியில் பேசும்போது எச்சரிக்கை யாக இருக்க வேண்டும்” என்றும் அறிவுறுத்தியுள்ளது.
மேலும் விபரங்கள் : 3