states

ரூ.17.80 லட்சம் கோடி ஊழல்

புதுதில்லி, ஆக.29-  அதானி குழுமம் மீது, ‘ஹிண் டன்பர்க் ரிசர்ச்’ முன்வைத்த ஊழல் முறைகேடுகள் தொடர்பான விசா ரணையை உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது. இந்த வழக்கில், இந்திய பங்கு கள் மற்றும் பரிவர்த்தனை வாரிய மான (SEBI), கடந்த வெள்ளிக்கிழ மையன்று (ஆகஸ்ட் 25) தனது அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தது.  அதில், அதானி குழுமம் செய்த  24 பரிமாற்றங்களில் 22 பரிமாற்றங்  களின் விசாரணை முடிவுக்கு வந்  துள்ளதாகவும், 2 பரிமாற்றங்களின்  விசாரணை நிலுவையில் இருப்ப தாகவும் தெரிவித்திருந்தது. ‘செபி’யின் இந்த அறிக்கை, செவ்வாயன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விசா ரணையை உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது. பங்குச்சந்தை வர்த்தகத்தில் அதானி குழுமம் ரூ.17 லட்சத்து 80 ஆயிரம் கோடி அளவிற்கு ஊழல்  முறைகேடு செய்துள்ளதாக, அமெ ரிக்காவைச் சேர்ந்த ‘ஹிண்டன்பர்க்  ரிசர்ச்’ என்ற ஆராய்ச்சி நிறுவனம்,  கடந்த ஜனவரியில் அறிக்கை வெளியிட்டது.  அதைத் தொடர்ந்து, அதானி  குழுமம் மீது ஊழல் குற்றச்சாட்டுக் களை சுமத்தும் ஹிண்டன்பர்க் அறிக்கை மீது விசாரணை நடத்தப்  பட வேண்டும் என்று உச்சநீதி மன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்களை விசாரித்த தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா, ஜே.பி.பர்திவாலா ஆகியோர் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு,  ‘ஹிண்டன்பர்க் ரிசர்ச்’ அறிக்கை யில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்  களை இரண்டு மாதங்களுக்குள் விசாரிக்குமாறு இந்திய பங்குகள்  மற்றும் பரிவர்த்தனை வாரியத் திற்கு (SEBI) கடந்த மார்ச் 2 அன்று உத்தரவு பிறப்பித்திருந்தது. பின்  னர் ‘செபி’ கோரியதன் அடிப்படை யில் மே 17 அன்று, மேலும் 3 மாதங்  கள் அவகாசம் வழங்கியது.  அதானி குழுமம் தொடர்பான  ‘ஹிண்டன்பர்க் ரிசர்ச்’ அறிக்கை யின் பின்னணியில், “பத்திர ஒப்பந்த  ஒழுங்குமுறை விதி 19(a) மீறப்பட்  டுள்ளதா? ஏற்கெனவே உள்ள சட்  டங்களுக்கு முரணாக பங்கு விலை களில் ஏதேனும் கையாளுதல் செய்  யப்பட்டு உள்ளதா?” என ஆராய்ந்து அறிக்கை அளிக்குமாறு உத்தர விட்ட உச்சநீதிமன்றம், ‘செபி’ அதன் இறுதி ஆய்வறிக்கையை சமர்ப்பிக்க ஆகஸ்ட் 14 கடைசி நாள் என்று குறிப்பிட்டிருந்தது. ஆனால், விசாரணையை முடிக்க, மேலும் 15 நாள் அவகாசம் வழங்கு மாறு ‘செபி’ கோரிக்கை விடுத்தது. இந்தப் பின்னணியில், ஆகஸ்ட்  29 அன்று விசாரணை துவங்கும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்தி ருந்த நிலையில், அதானி குழு மத்தின் 24 சந்தேகத்திற்குரிய பரி மாற்றங்களில் 22 பரிமாற்றங்களின் விசாரணையை முடித்து, ஆகஸ்ட் 25 அன்று, ‘செபி’ அறிக்கை சமர்ப்  பித்தது. இதனிடையே, ஆகஸ்ட் 29  அன்று விசாரணை நடைபெற வில்லை. உச்சநீதிமன்றம் விசார ணையை ஒத்திவைத்துள்ளது.

முறைகேடுகளைக் கண்டுபிடித்ததா ‘செபி’?

முறைகேடுகளைக் கண்டுபிடித்ததா ‘செபி’? அதானி குழுமத்தின் பங்கு பரிவர்த்தனைகள் தொடர்பாக ஆய்வு செய்து வந்த ‘செபி’, உச்சநீதிமன்றத்தில் தனது  அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. இந்த ஆய்வறிக்கை யின் விவரங்கள் இனிமேல்தான் தெரியவர உள்ளது. ஆனால், “அபராதம் விதிக்கக்கூடிய அளவிலான முறைகேடு களையே ‘செபி’ கண்டுபிடித்துள்ளதாகவும், இதனால், அதானி குழு மம் மீது மிகப்பெரிய நடவடிக்கை எதுவும் எடுக்கப்படுவதற்கான வாய்ப்பில்லை” என்றும் பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரிகள் கூறி யதாக ‘ராய்ட்டர்ஸ்’ நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.  ஒவ்வொரு விதிமீறல்களுக்கும் அதிகப்படியாக 1 கோடி ரூபாய் அளவிற்கே அபராதம் விதிக்கப்பட வாய்ப்புகள் உள்ளது என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அதுமட்டுமல்ல, ‘ஹிண்டன்பர்க் ரிசர்ச்’ அறிக்கை வெளியான ஜனவரி 24-க்கு 2-3 நாட்கள் முன்பாகவே அதானி குழும பங்குகள் மீது  சிலர், ‘ஷாட் செல்லிங்’ செய்துள்ளனர் என அமலாக்கத்துறை ஜூலை  மாதம் ‘செபி’ அமைப்பிற்கு சமர்ப்பித்த அறிக்கையில் தெரிவித்தி ருந்தது. இதனையும் ‘செபி’ உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கும் என்று கூறப்படுகிறது. அதாவது, அதானி குழுமம் மீதான ஹிண்டன்பர்க் ரிசர்ச்  அறிக்கையால், 12-க்கும் அதிகமான வெளிநாட்டு போர்ட்போலியோ முதலீட்டாளர்கள் மற்றும் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் அதி கப்படியான லாபம் அடைந்துள்ளதாகவும், அவற்றில் 3 இந்தியாவைச் சேர்ந்தது, 4 மொரிஷியஸ் நாட்டை சேர்ந்தது. பிரான்ஸ், ஹாங்காங், கேமன் தீவுகள், அயர்லாந்து மற்றும் லண்டன் ஆகியவற்றில் இருந்து  தலா ஒரு நிறுவனம் அதானி குழும பங்குகள் மீது ஷாட்டிங் செய்து  பெரிய அளவிலான லாபத்தை பார்த்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது. சிலரின் லாபத்திற்காக, அதானி குழுமத்திற்கு எதிராக சதி நடந்தி ருக்கலாம் என்ற தோற்றத்தை ஏற்படுத்தும் வகையிலான அம லாக்கத்துறையின் இந்த அறிக்கையும் உச்சநீதிமன்றத்தின் பார்வைக்கு  கொண்டு செல்லப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.