states

img

ஹரியானா முதல்வரின் பிடிவாதமும் 81 நாள் போராட்டமும்

ஹரியானா, பிப்.27- ஒன்றிய அரசின் ஊதிய உயர்வை அமல்படுத்த வேண்டும். 2018-ஆம் ஆண்டு சட்டசபையில் ஹரியானா முதல்வர் அறிவித்த ஊதிய உயர்வு அறிவிப்பை அமல்படுத்த வேண்டும் என அங்கன்வாடி ஊழியர்கள் கடந்த 81 நாட்களாக போராடி வருகின்றனர். மனோகர்லால் கட்டார் தலைமையிலான பாஜக அரசு வாக்குறுதிகளை நிறை வேற்றாமல்  பொய்ப் பிரச்சாரம், ஆட்குறைப்பு, தொழிலாளர்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்வது என ஐனநாயகத்திற்கு புறம்பான நடவடிக்கைகளை மேற் கொள்கிறது.  அடக்குமுறைக்கு மத்தி யிலும் அங்கன்வாடி பணி யாளர்கள் தங்கள் போராட்ட த்தை துணிச்சலுடன் தொடர்கின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டு ள்ளவர்கள் ஹரியானா அரசு கடுமையான எஸ்மா சட்டத்தை நிபந்தனையின்றி வாபஸ் பெற வேண்டும். கைது செய்யப்பட்ட தலை வர்கள் மற்றும் தொழிலாளர் களை உடனடியாக விடு விக்க வேண்டும். ஆஷா மற்றும் அங்கன்வாடி தொழிற் சங்கங்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை ஹரி யானா அரசு அமல்படுத்த வேண்டுமென வலியுறுத்தி அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள், முதல்வரின் தொகுதியான கர்னாலில் பிப்ரவரி 14-ஆம் தேதி போராடி வருகின்றனர். உசசபட்சமாக பாஜக சட்டமன்ற உறுப்பினர்களின் வீடுகள் அருகிலும் இரவில் தங்கி போராட்டத்தைத் தொடர்கின்றனர்.