states

img

அஞ்சல் வாக்கில் 51.5 சதவீதத்தை பெற்ற சமாஜ்வாதி கூட்டணி!

லக்னோ, மார்ச் 16- உ.பி. சட்டப்பேர வைத் தேர்தலில் பதி வான அஞ்சல் வாக்கு களில் பெரும்பான்மை யான வாக்குகளை சமாஜ்வாதி கட்சியே பெற்றிருப்பதாக அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் கூறியுள்ளார். அண்மையில் நடந்து முடிந்த உ.பி. சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் பாஜக 255 இடங்களில் வெற்றிபெற்று பெரும்பான் மையுடன் ஆட்சி தக்கவைத்து கொண்டது. பாஜக 41.29 சதவிகித வாக்குகளைப் பெற்ற நிலையில், அகிலேஷ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி 111 தொகுதிகளுடன் 32.06 சதவிகித வாக்குகளை கைப்பற்றியது. இந்நிலையில், அஞ்சல் வாக்குகளில் சமாஜ்வாதியே முதலிடம் பெற்றிருப்பதாக, தனது டுவிட்டர் பக்கத்தில் அகிலேஷ் தெரி வித்துள்ளார். “உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் சமாஜ்வாதி கூட்டணி 51.5 சத விகித அஞ்சல் வாக்குகளை பெற்றுள்ளது. இது, உ.பி. தேர்தலில் உண்மையிலேயே யார் வெற்றி பெற்றவர்கள் என்பதைக் காட்டு கிறது. இதன்படி பார்த்தால் எங்கள் கூட்டணி 304 இடங்களை கைப்பற்றியிருக்கும்” என்று கூறியுள்ள அகிலேஷ், “நேர்மையற்ற செயல்கள் மூலம் தோ்தலில் வெற்றி பெறு வது எந்த வகையிலும் பலத்தை அதிக ரிக்காது என்பதை ஆளும் கட்சி உணர்ந்து கொள்ள வேண்டும்” என்று வலியுறுத்தி யுள்ளார்.  மேலும், தங்களுக்கு வாக்களித்த அனைத்து பாதுகாப்பு பணியாளர்கள், அரசு ஆசிரியர்கள் மற்றும் பிற வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புவதாகவும் அகி லேஷ் குறிப்பிட்டுள்ளார்.