states

img

ரெப்போ வட்டி விகிதம் 6.5 சதவிகிதமாக நீடிக்கும்!

புதுதில்லி, அக்.6- இந்திய ரிசர்வ் வங்கி, நாட்டின் பிற  வணிக வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய காலக் கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதம் 6.5 சதவிகிதமாகவே நீடிக்கும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் அறிவித்துள்ளார். கடந்த 2020-ஆம் ஆண்டில் 4 சதவிகிதமாக இருந்த வட்டி விகிதத்தை, 2022 மே மாதம் முதல் 6 முறை உயர்த்தி, இரண்டாண்டுகளுக்குள் 6.25 சதவிகிதத்திற்கு கொண்டு சென்றது. 2023-ஆம் ஆண்டிலும் கடந்த பிப்ரவரி மாதம் மேலும் 25 புள்ளிகள் உயர்த்தப்பட்டால், 6.5 சதவிகிதம் என்று ஆக்கியது. இந்நிலையில், வெள்ளிக்கிழமையன்று பேட்டி அளித்த  ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ், “வளர்ந்து வரும் மேக்ரோ பொருளாதாரம் மற்றும் நிதி முன்னேற்றம் ஆகிய வற்றின் விரிவான மதிப்பீட்டிற்குப் பிறகு, ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு, ரெப்போ வட்டி விகிதத்தை 6.5 சதவிகி தமாக நீடிக்க ஏகமனதாக முடிவு செய்தது” என்று தெரிவித்துள்ளார்.