புதுதில்லி, ஜன. 31 - நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர், செவ்வாயன்று துவங்கியது. 2023-ஆம் ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால், குடியரசுத் தலை வர் திரௌபதி முர்மு உரையுடன் கூட்டத் தொடர் துவங்கியது. முன்னதாக கூட்டத்தொடரில் பங்கேற் பதற்காக ராஷ்டிரபதி பவனிலிருந்து குதிரைப்படைச் சூழ குடியரசுத் தலை வர் திரௌபதி முர்மு நாடாளுமன்றத் திற்கு வருகை தந்தார். அவரை, குடியர சுத் துணைத்தலைவரும், மாநிலங் களவைத் தலைவருமான ஜகதீப் தன்கர், மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, பிரதமர் நரேந்திர மோடி ஆகி யோர் முன்னின்று வரவேற்று அழைத்துச் சென்றனர்.
அதைத்தொடர்ந்து, நாடாளு மன்றக் கூட்டுக்கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றி னார். கடந்த 2022 ஜூலையில் இந்தியா வின் 15-ஆவது குடியரசுத் தலைவராக பதவியேற்றுக் கொண்ட திரௌபதி முர்மு நாடாளுமன்றத்தில் ஆற்றிய முதல் உரையாக இது இருந்தது.
அந்த உரையில், “தன்னம்பிக்கை யில் இந்தியா இன்று உயர்ந்து நிற்கிறது. ராஜபாதையை கடமை பாதை என்று பெயர் மாற்றியிருப்பதன் மூலம் அடி மைத்தன அடையாளங்கள் ஒழிக்கப் பட்டுள்ளன. இதனால், இந்தியாவை இன்று உலகமே உற்று நோக்குகிறது. இந்தியாவைப் பற்றிய உலகின் கண்ணோட்டமும் மாறியிருக்கிறது. உலகின் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வினை இந்தியா வழங்குகிறது” என்றார். குடியரசுத் தலைவரின் உரையைத் தொடர்ந்து, தலைமை பொருளாதார ஆலோசகர் வி.ஆனந்த நாகேஸ்வரன் மேற்பார்வையின் கீழ் தயார் செய்யப் பட்ட 2022-23 ஆம் ஆண்டிற்கான பொரு ளாதார ஆய்வறிக்கையை, நிதியமைச் சர் நிர்மலா சீதாராமன் தாக்கல்செய்தார். நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடர் ஜன வரி 31 துவங்கி ஏப்ரல் 6 வரை இரண்டு பகுதியாக நடைபெற உள்ளது. இதில் முதல் பாதி ஜனவரி 31 அன்று தொடங்கி பிப்ரவரி 14 வரையும், இரண்டாவது பகுதி மார்ச் 12 அன்று துவங்கி ஏப்ரல் 6-ஆம் தேதி வரையும் நடைபெறும். இந்த கூட்டத்தொடரில் 4 பொருளாதார மசோதாக்கள் உட்பட மொத்தம் 36 மசோதாக்களை நிறைவேற்ற ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது.