states

img

பொதுச் செயலாளர் மேசையிலிருந்து...

நியூயார்க் டைம்ஸ் ஏட்டில் ஒரே ஒரு ஒற்றை வரி தான் நியூஸ் க்ளிக் இணைய ஏடு பற்றி எழுதப்பட்டிருந்தது. அந்த இணைய தளத்தை மூடி, சீல் வைத்து, அதன் பத்திரிகையாளர்களை உபா சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க மோடி அரசுக்கு அதுவே போதுமானதாக இருந்தது. அதேவேளையில் பைனான்சியல் டைம்ஸ் ஏடு, நிலக்கரி இறக்குமதி செய்ததிலும், அதை வைத்து மின்சாரம் தயாரித்து விநியோகித்த லும் பல லட்சம் டாலர்கள் அதானி குழுமம் கொள்ளையடித்திருக்கிறது; மின் பயனீட்டாளர் களான லட்சக்கணக்கான இந்தியர்களிடம் அவர் கொள்ளையடித்திருக்கிறார் என்று மிக விரிவாக அம்பலப்படுத்தியுள்ளது. ஆனால் மோடி அரசு மவுனம் காக்கிறது.  மோடியும் அவரது கூட்டுக் களவாணிகளும் இந்தியாவை சூறையாடுகிறார்கள்.