states

img

பாஜகவுக்கு எவ்வளவு நிதியோ அவ்வளவுக்குத் தவறு செய்யலாம்

நவயுகா என்ஜினியரிங் - மறக்க முடியாத பெயர். 41 தொழிலாளர்கள் மாட்டிக் கொண்ட சுரங்கத்தை, சட்டப் படியும், ஒப்பந்தப்படியும் செய்ய வேண்டிய பாதுகாப்பு  அம்சங்களைச் செய்யாமலேயே கட்டி, தொழிலாளர் களின் உயிரைப் பணயம் வைத்த நிறுவனம். தொழிலா ளர்களைக் காப்பாற்றிய எலி வளைச் சுரங்கமுறைக் குழுவினரின் தலைவரின் வீட்டை, அனுமதி பெறாத வீடு  என்று புல்டோசர் கொண்டு இடித்த இந்த அரசு, அந்த தவ றிழைத்த நவயுகா நிறுவனத்தின்மீது எந்த நடவடிக்கை யும் எடுக்கவில்லை. எவ்வளவு நிதி பாஜகவுக்கு அளித்தி ருக்கிறார்களோ, அவ்வளவுக்குத் தவறு செய்யலாம் என்பதுதானே மோடி அரசின் விதி? ஆம், இந்த நிறுவனம் ரூ.55 கோடியைத் தேர்தல் பத்திரங்களாக பாஜகவுக்கு வழங்கியிருக்கிறது. இதில் கவனிக்க வேண்டிய செய்தி என்னவென்றால், கடந்த 4 ஆண்டுகளில் லாபமே ஈட்ட வில்லை என்றும் நிகர நட்டம் ரூ.495 கோடி என்றும் அந்த  நிறுவனம் தெரிவிக்கிறது. 2018 அக்டோபரில் இந்த நிறுவனத்தின்மீது வருமான வரித்துறைச் சோதனை நடத்தப்படுகிறது. அடுத்த ஆறு மாதங்களில் ரூ.30 கோடிக்குத் தேர்தல் பத்திரங்கள் வாங்கி அத்தனையையும் பாஜகவுக்கு அளிக்கிறது இந்த நிறுவனம். சந்திரபாபு நாயுடு ஆட்சிக் காலத்தில் இந்நிறுவனம் பெற்றிருந்த திட்டம் ஒன்றை, ஜெகன் மோகன் ரெட்டி ரத்து  செய்யப் போகிறார் என்று தெரிந்ததும், 2019 அக்டோபரில், பாஜகவுக்கு ரூ.15 கோடியைத் தேர்தல் பத்திரங்களாக அளிக்கிறது இந்தக் கட்சி. ஆனாலும் பலனில்லை என்பது  தனிக்கதை. ஆனாலும் வேறு பல பெரிய திட்டங்கள் இந்நிறு வனத்துக்கு அளிக்கப்படுகின்றன. ஆகஸ்ட் 2020இல் இதற்கு அளிக்கப்பட்ட ரூ.2,072 கோடி மதிப்புள்ள ரிஷி கேஷ் கர்ணப்ரயாக் ரயில் பாதைத் திட்டம் ஓர் உதாரணம். 2022 அக்டோபரில் இந்த நிறுவனம் மேலும் ரூ.10 கோடி யை பாஜகவுக்குத் தேர்தல் பத்திரங்களாக அளிக்கிறது.