குளிர்கால கூட்டத்தொடரின் கடைசி நாளான வெள்ளிக்கிழமை காலை மக்களவை தொடங்கியதும் அம்பேத்கரை அவமதித்த அமித் ஷாவை மன்னிப்புக் கேட்கக் கோரியும், பதவி விலகக்கோரியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீதான வழக்குப் பதிவை கண்டித்தும் “இந்தியா” கூட்டணி எம்.பி.,க்கள் முழக்கங்களை எழுப்பினர். இந்த முழக்கங்களால் மிரண்ட மோடி அரசு, வந்தே மாதரம் பாடலை திடீரென ஒலிக்க வைத்தது. பாடல் ஒலித்தவுடன் “இந்தியா” கூட்டணி எம்.பி.,க்கள் அமித் ஷாவுக்கு எதிரான முழக்கங்களை நிறுத்திவிட்டு, வந்தே மாதரம் பாடலை பாட ஆரம்பித்தனர். வந்தே மாதரம் பாடல் முடிந்த பின்பு சபாநாயகர் ஓம் பிர்லா தேதி குறிப்பிடாமல் அவையை ஒத்திவைப்பதாக அறிவித்தார். “இந்தியா” கூட்டணி எம்.பி.,க்களின் அமளிக்கு பயந்து வந்தே மாதரம் பாடலை ஒலிக்க விட்டு மோடி அரசு ஓட்டம் பிடித்துள்ளது அதே போல எதிர்க்கட்சிகளின் அமளியால் மாநிலங்களவையும் தேதி குறிப்பிடாமல் அவை ஒத்திவைக்கப்படுவதாக அவைத் தலைவர் அறிவித்தார்.