states

img

புதிய வேவு மென்பொருளுக்கு ரூ.1000 கோடி

வேவு பார்க்கும் இழிதிட்டத்தைக் கைவிடாத மோடி அரசு, பெகாசஸ் மென்பொருளுக்கு பதிலாக வேறு மென்பொருளைத் தேடுகிறது. “பெகாசஸ்”க்கு போட்டியாக இருக்கும் -அதிகமாக வெளியில் அறியப்படாத இஸ்ரேல் உளவு நிறுவனங்களால் விற்கப்படும் புதிய வேவு மென்பொருளுக்காக 120 மில்லியன் டாலர் (ரூ. 986 கோடிக்கு மேல்) செலவழிக்க ஒன்றிய பாஜக அரசு செலவிட தயாராகி வருகிறது.

புதுதில்லி, ஏப்ரல் 2- நாட்டு மக்கள் மீதான கண்காணிப்பு கட்ட மைப்பை (வேவு பார்க்கும் கட்டமைப்பு) மேலும் பலப்படுத்தும் முயற்சியில் களமிறங்கியுள்ள மோடி அரசு, பெகாசஸ் தவிர்த்து, பொது வெளியில் தெரிய வராத வேறு ஸ்பைவேர் தொழில்நுட்பங் களை வாங்க ரூ.1000 கோடி செலவிட தயாராகி வருவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

பெகாசஸ்

இஸ்ரேலின் என்எஸ்ஓ நிறுவனம் தயாரித்த ‘பெகாசஸ்’ என்பது இராணுவ தர அமைப்பை கொண்ட ஸ்பைவேர் (வேவு பார்க்கப் பயன்படுத்தப் படும் மென்பொருள்) ஆகும். இந்த வேவு மென் பொருள், ரகசியமாக பதிவிறக்கம் செய்யப்பட் டால், யாரையும் எளிதாக கண்காணிக்க முடியும்.  கடந்த 2021-ஆம் ஆண்டு பிரான்ஸ் ஊடகங்கள் தலைமையிலான சர்வதேச செய்தி ஊடகங்கள், “பெகாசஸ் வேவு மென்பொருள் மூலம் ஒவ்வொரு நாட்டின் பத்திரிகையாளர்கள், எதிர்க்கட்சித் தலை வர்கள், அரசாங்க விமர்சகர்கள் மற்றும் ஆர்வலர் களின் தொலைபேசிகள் கண்காணிக்கப்படுவதாக  “உண்மையை” போட்டு உடைத்தன.  அதன் பிறகு பெகாசஸ் மென்பொருள் குறித்து அதிர்ச்சி தகவல்கள் வெளியாக, இந்தியாவில் ரூ.16,000 கோடி ஒப்பந்தத்தின் அடிப்படையில் எதிர்க்கட்சித் தலைவர்கள், அரசுக்கு எதிராக கருத்து தெரிவிப்பவர்கள், நீதிபதிகள், வழக்கறி ஞர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்ட முக்கியப் பிரமுகர்களின் செல்போன்கள் உளவு பார்க்கப்பட்டதாக ஜெருசலேமில் இருந்து நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டது. இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி யது.

உண்மையைக் கண்டறிந்த உச்சநீதிமன்ற விசாரணை தொழில்நுட்பக் குழு

சொந்த நாட்டு மக்களையே உளவு பார்க்கும் மோடி அரசின் இந்த பிற்போக்குத்தனமான தாக்கு தலுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இதுதொடர்பான விசார ணையில், தேசியப் பாதுகாப்பை மேற்கோள் காட்டி  பெகாசஸைப் பயன்படுத்துகிறதா என்பதை வெளிப்படுத்த முடியாது என்று மோடி அரசு உச்சநீதிமன்றத்தில் கூறியது.  மேலும் உச்சநீதிமன்றத்தால்  நியமிக்கப் பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி  தலைமையிலான தொழில்நுட்பக் குழுவின் விசாரணைக்கும் ஒன்றிய மோடி அரசு ஒத்துழைக்க மறுத்து விட்டது. ஆனாலும் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான தொழில்நுட்பக் குழு,” இது பெகாசஸ்தானா  என்பதை சாதகமாக உறுதிப்படுத்த முடியவில்லை  என்றாலும், சோதனை செய்த ஸ்மார்ட்போன் களில் வேவு மென்பொருள் இருப்பதைக் கண்டறிந்துள்ளதாகவும்” கூறியது. இதனால் உச்ச நீதிமன்றம் கடும் அதிருப்தியுடன் அடுத்த கட்ட விசாரணைக்கு வழக்கை ஒத்திவைத்தது. 

ரூ. 986 கோடி

இந்த நிலையிலும், வேவு பார்க்கும் இழி திட்டத் தைக் கைவிடாத மோடி அரசு, பெகாசஸ் மென்பொரு ளுக்கு பதிலாக வேறு மென்பொருளைத் தேடு கிறது என்பது தெரியவந்துள்ளது. இஸ்ரேலின் என்எஸ்ஓ குழுவின் “பெகாசஸ்”க்கு போட்டியாக இருக்கும் -அதிகமாக வெளியில் அறியப்படாத இஸ்ரேல் உளவு நிறுவனங்களால் விற்கப்படும் புதிய வேவு மென்பொருளுக்காக 120 மில்லியன் டாலர் (ரூ. 986 கோடிக்கு மேல்) செலவழிக்க ஒன்றிய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

மோடி அரசின் தெரிவில் 4 உளவு நிறுவனங்கள்

மோடி அரசு வாங்கவுள்ள புதிய வேவு மென் பொருள் (ஸ்பைவேர்) பட்டியலில் 4 நிறுவனங்கள் உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 4 நிறுவனங்களுமே இஸ்ரேல் நாட்டை சேர்ந்தவை.  1. இன்டெல்லெக்சா: மோடி அரசின் தேர்வில் முதல் இடத்தில் இருப்பது  இன்டெல்லெக்சா (Intellexa - இஸ்ரேல் நிறுவனம்) ஆகும். கிரீஸ் நாட்டில் மறைமுகமாக உளவு வேலையில் ஈடுபட்டு  சிக்கி அபராத ஆணையைப் பெற்றதுதான் இந்த  “இன்டெல்லெக்சா”ஆகும். 2. பிரிடேட்டர்: அடுத்து பெகாசஸின் அதே என்எஸ்ஓ நிறுவன கட்டுப்பாட்டிலும், இஸ்ரேலிய இராணுவ வீரர்களின் நேரடி தொடர்புடனும் உள்ள  “பிரிடேட்டர்” (Predator - இஸ்ரேல் நிறுவனம்)  என்ற பெயரிலான நிறுவனத்தின் வேவுமென்பொரு ளை மோடி அரசாங்கம் வாங்கும் முனைப்பில் உள்ளது.  “பிரிடேட்டர்”  எகிப்து, சவூதி அரேபியா, மடகாஸ்கர் மற்றும் ஓமன் போன்ற மனித உரிமைகள் குறியீட்டில் கீழே உள்ள நாடுகளில் மறைமுக பயன்படுத்தப்பட்டதாக “பிரிடேட்டர்”  மீது  நீண்ட குற்றச்சாட்டு உள்ளது. தற்போது மோடி  அரசு இந்த பிரிடேட்டர் மென்பொருளை பயன்படுத்த தயாராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 3. குவாட்ரீம்: சவூதி அரசுக்கு எதிராக இருந்ததாக, அந்நாட்டின் அரசால் கொல்லப்பட்ட பத்திரிகையாளர் ஜமால் கஷோகியின் கொலை க்கு காரணமாக இருந்தது குவாட்ரீம் (Quadream - இஸ்ரேல் நிறுவனம்) வேவு மென்பொருள். இதையும் வாங்க இந்திய அரசு திட்டமிட்டுள்ளது. 4. காக்நைட்: நார்வே நாட்டில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்திய “காக்நைட்” (Cognyte - இஸ்ரேல் நிறுவனம்) வேவு மென்பொருளையும் வாங்கும் முனைப்பில் மோடி அரசாங்கம் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அம்பலப்படுத்திய  பைனான்சியல் டைம்ஸ்

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான பாதுகாப்பு அமைச்சகத்திற்குள் புதிய ஸ்பைவேரை வாங்குவதற்கான பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருவதாகத் தெரிகிறது. பேச்சுவார்த்தை ஏறக்குறைய இறுதிக்கட்ட நிலையில் உள்ளது. ஆனால் அதற்குள் இந்திய பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை அதிகாரிகள் பரிசீலித்து வரும் ஸ்பைவேர் விற்பனையாளர்களில் பலர் இஸ்ரேலிய இராணுவத்துடன் நேரடி அல்லது மறைமுகமாக தற்போதே ஈடுபாட்டுடன் இருப்பதாக ‘பைனான்சியல் டைம்ஸின்’ செய்தி தெரிவிக்கிறது. இதுதொடர்பான தகவல் பெற குவாட்ரீம், பிரிடேட்டர், இன்டெல்லெக்சா ஆகிய நிறு வனங்களையும், ஒன்றிய பாதுகாப்பு அமைச்ச கத்தையும் தொடர்பு கொள்ள முடியவில்லை என பைனான்சியல் டைம்ஸ் குற்றம்சாட்டியுள்ளது.

சீத்தாராம் யெச்சூரி குற்றச்சாட்டு

இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி தனது டுவிட்டர் பக்கத்தில், “சொந்த மக்களையே வேவு பார்க்கும் கட்டமைப்பை மோடி அரசு மேலும் பலப்படுத்தி வருகிறது. இதற்காக பெகாசஸ் தவிர  வேறு ஸ்பைவேர் தொழில்நுட்பங்களை ஆதார மாகக் கொள்ள கிட்டத்தட்ட ரூ.1000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலிடம் இருந்து பெகாசஸ் நிறுவனத்தை இந்தியா வாங்கியதாக “நியூயார்க் டைம்ஸ்” கடந்த ஆண்டு செய்தி வெளி யிட்டது இப்போது வந்துள்ள புதிய தகவல்கள் அதிர்ச்சி தருகின்றன”எனக் குறிப்பிட்டுள்ளார்.