states

img

அக்னிபாதை ‘காண்ட்ராக்ட்’ பணிக்கு சாதி, மதச் சான்றிதழ் கேட்பதா?

அக்னிபாதை திட்டத்திற்கு விண்ணப்பிப்பவர்கள் தங்களது சாதிச் சான்றிதழ்களை சமர்ப்பிக்குமாறு இந்திய ராணுவம் கேட்டிருப்பது, புதிய சர்ச்சையை உருவாக்கியிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் சாதிச் சான்றிதழில் மதம் குறிப்பிடப்படாத நிலையில், அவர்கள் தாங்கள் சீக்கியர், இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர் என்பதற்கான மதச் சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

புதுதில்லி, ஜூலை 19- அக்னிபாதைத் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்த இளைஞர்களிடம் சாதி, மதச் சான்றிதழ்களை இந்திய ராணுவம் கேட்டுள்ளது புதிய சர்ச் சையை ஏற்படுத்தியுள்ளது.  இது இதற்கு முன்பு இல்லாத நடைமுறை என்றும், இதன்மூலம் ராணுவ வீரர்களை, சாதி, மத அடிப்படையில் மோடி அரசு துண்  டாட முயல்வதாகவும் பல்வேறு தரப்  பிலும் கண்டனங்கள் எழுந்துள்ளன. இந்த விபரீத முயற்சியை மோடி அரசு கைவிட வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன. நரேந்திர மோடி தலைமையி லான ஒன்றிய பாஜக அரசானது, ராணுவ வீரர்கள் நியமனத்தில் ‘அக்னி பாதை’ (‘Agnipath’ Recruitment Scheme) எனும் காண்ட்ராக்ட் முறை யை கொண்டு வந்தது. இதன்படி 17.5 முதல் 23 வயதுடைய இருபால ரும் ராணுவம், கடற்படை, விமானப்  படை ஆகிய மூன்று படைப்பிரிவு களிலும் கீழ்நிலை ஊழியர்களாக பணியில் சேரலாம். இந்த காண்ட்  ராக்ட் வீரர்கள் ‘அக்னி வீரர்கள்’  (Agniveer) என்று அழைக்கப்படுவர்.  இவர்களுக்கு மாத ஊதியமாக 30 ஆயிரம் ரூபாய் முதல் 40 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்படும். 4 ஆண்டுகளுக்குப் பின் இவர்களில் 75 சதவிகிதம் பேர் பணியிலிருந்து விடுவிக்கப்படுவார்கள். அவர்க ளுக்கு ஒய்வூதியம் எதுவும் வழங்கப்  படாது. மாறாக, இந்த வீரர்களின் சம்பளத்திலிருந்தே மாதம் 30 சதவிகிதம் (ரூ. 9 ஆயிரம் முதல் ரூ.  12 ஆயிரம் வரை) பிடித்தம் செய்யப்  பட்டு, அதே அளவிற்கான தொகை யை அரசாங்கமும் சேர்த்து பணப் பலன் என்ற அளவில் ரூ. 11 லட்சத்து 71 ஆயிரத்தை வழங்கும் என்று மோடி அரசு கூறியது. 

இதற்கு எதிராக நாடு முழுவதும் இளைஞர்கள் ஆவேசமிக்க போராட் டத்தை நடத்தினர். சாலைகள் மறிக்  கப்பட்டன. பேருந்து, ரயில்கள் எரிக் கப்பட்டன. பாஜக தலைவர்களின் வீடு, அலுவலகங்களும் அடித்து நொறுக்கி சூறையாடப்பட்டன. மூன்று இளைஞர்கள் தற்கொலை யும் செய்து கொண்டனர். எனினும் மோடி அரசு பிடிவாத மாக ‘அக்னிபாதை’ திட்டத்தை  கடற்படை மற்றும் விமானப்படை களில் தற்போது அமல்படுத்தியுள் ளது. நடப்பாண்டில் 46 ஆயிரம் பேர்  களை நியமிப்பதற்காக பல லட்சம்  விண்ணப்பங்களையும் பெற்றுள்ளது. இதனிடையே, அக்னிபாதை திட்டத்திற்கு விண்ணப்பிப்பவர்கள் தங்களது சாதிச் சான்றிதழ்களை சமர்ப்பிக்குமாறு இந்திய ராணுவம் கேட்டிருப்பது, புதிய சர்ச்சையை உருவாக்கியிருக்கிறது. அதுமட்டு மல்லாமல் சாதிச் சான்றிதழில் மதம் குறிப்பிடப்படாத நிலையில், அவர்கள் தாங்கள் சீக்கியர், இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர் என்பதற்கான மதச் சான்றிதழ்களை சமர்ப்பிக்க  வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்திய ராணுவத்தைப் பொறுத்தவரை எஸ்.சி., எஸ்.டி., ஓபிசி, இ.டபிள்யூ.எஸ், மத ஒதுக்கீடு என எந்தவொரு இடஒதுக்கீடும் பின்பற்றப்படுவதில்லை. மெரிட் அடிப்படையில் மட்டுமே வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.  அப்படியிருக்க, அக்னிபாதைத் திட்டத்திற்கு விண்ணப்பித்தவர்களி டம் இந்திய ராணுவம் சாதி, மதச் சான்றிதழ்களை கேட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக இந்திய ராணுவம் விளக்கமளிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்துள்ளன.

இந்திய ராணுவம் உருவாக்க முயல்வது அக்னிவீரர்களா, சாதி வீரர்களா?

தேசபக்திக்கும் சாதிக்கும் என்ன சம்பந்தம்?

அக்னிபாதைத் திட்டத்தின் விண்  ணப்பித்துள்ள இளைஞர்களி டம் இந்திய ராணுவம் சாதிச் சான்றிதழ் கேட்டிருப்பதற்கு அரசியல் கட்சிகள் கண்ட னம் தெரிவித்துள்ளன. “இந்திய வரலாற்றில் முதன்முறையாக ராணுவ ஆட்சேர்ப்பில் சாதி கேட்கப்படு கிறது” என்று ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் மோடி அரசை கடுமையாக சாடியுள்ளார். “மோடிஜி நீங்கள் உருவாக்கப் போவது அக்னிவீரர்களையா, அல்லது சாதி வீரர்  களையா? தலித்துக்கள், பிற்படுத்தப்பட் டோர், பழங்குடியினர் ராணுவ ஆள்சேர்ப் புக்கு தகுதியானவர்கள் என்று மோடி ஜி  கருதவில்லையா?” என்று கேள்வி எழுப்பி யுள்ள சஞ்சய் சிங் “மோடி அரசின் மோச மான முகம் நாட்டின் முன் வந்துவிட்டது” என்றும் குறிப்பிட்டுள்ளார். இதையே பாஜக கூட்டணியில் இருக்கும் ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் மூத்த தலை வரான உபேந்திர குஷ்வாஹாவும் கேட்டுள்  ளார்.

“ராணுவத்திற்கான பணி நியமனங்க ளில், இதுவரை இடஒதுக்கீடு வழங்கப்படாத நிலையில், சாதிச் சான்றிதழின் அவசியம் என்ன?” என்றும், “சம்பந்தப்பட்ட துறை அதி காரிகள் விளக்கம் அளிக்க வேண்டும்” என்றும் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இது குறித்து பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்  பதிலளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி யுள்ளார். “ராணுவத்தில் எந்தவிதமான இட ஒதுக்கீடும் இல்லை, ஆனால் அக்னிபாதை ஆட்சேர்ப்பில் சாதிச் சான்றிதழ் கோரப்பட் டுள்ளது, இப்போது ஒருவரின் தேசபக்தியை அவர்களின் சாதியின் அடிப்படையில் தீர்மானிப்போமா?” என்று பாஜகவைச் சேர்ந்த வருண் காந்தி எம்.பி. கேள்வி எழுப்பி யுள்ளார். “இதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அரசு சிந்திக்க வேண்டும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.