சண்டிகர், ஆக.9- கலவரத்தால் பாதிக்கப்பட்ட ஹரி யானாவின் நூஹ் பகுதியில் முஸ்லிம் மக்களின் வீடுகள் புல்டோசரால் இடிக்கப்பட்ட நிலையில், வீடுகளை இழந்த மக்களுக்கு மறுவாழ்வு வேண்டும் என கோரி உச்சநீதிமன்றத்தில் ஜமியத் உலமா அமைப்பு வழக்கு தொடர்ந்துள் ளது. ஹரியானா மாநிலத்தின் நூஹ் பகுதி யில் கடந்த வாரம் இந்துத்துவா அமைப் பான விஸ்வ இந்து பரிஷத் அமைப்பி னர் நிகழ்த்திய வன்முறை குர்கான், பரிதா பாத், பல்வால், பானிபட் ஆகிய 5 மாவட் டங்களில் பரவி இயல்புநிலை சீரழிந்து தவித்து வரும் நிலையில், இந்த வன் முறையில் 6 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வரும் நிலையில், கலவரத்தை கட்டுப் படுத்துகிறோம் என்ற பெயரில் முஸ்லிம் வீடுகள், கடைகள், உணவகங்களை புல்டோசர் மூலம் தேடி தேடி அழித்து வருகிறது ஹரியானா பாஜக அரசு. இதுவரை 350-க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள், 50-க்கும் மேற்பட்ட கான்கிரீட் வீடுகளை அம்மாநில பாஜக அரசு தகர்த் துள்ளது. இந்த பிரச்சனையை தானாக முன்வந்து விசாரித்த பஞ்சாப் - ஹரி யானா உயர்நீதிமன்றம் ‘‘இன அழிப்பு நட வடிக்கை எடுக்கப்படுகிறதா?’’ என கேள்வி எழுப்பி புல்டோசர் நடவடிக் கைக்கு தடை விதித்தது. மேலும் எத்தனை வீடுகள் இடிக்கப பட்டிருக்கின்றன. அவற்றை இடிக்க நோட்டீஸ் கொடுக்கப்பட்டதா என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய ஹரி யானா அரசுக்கு உத்தரவிட்டனர். உயர் நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து வீடுகளை இடிக்க தடை விதித்து துணை கமிஷனர் திரேந்திரா உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில், வீடுகள் இடிக்கப் பட்டுள்ளதால் தெருவில் தள்ளப்பட் டுள்ள நூஹ் குடியிருப்பாளர்களுக்கு மறு வாழ்வு அளிக்க உத்தரவிடக் கோரி முஸ்லிம் அமைப்பான ஜமியத் உலமா- இ-ஹிந்த் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.