95 சதவீத ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தோல்வியா?
புதுதில்லி,டிச.9 - 95 சதவீத ஸ்டார்ட் அப் நிறு வனங்கள் தோல்வியா? என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் மக்களவையில் (நட்சத்திர கேள்வி 31/ 08.12.2022) எழுப்பிய கேள்விக்கு, ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் மையப் படுத்தப்பட்ட தகவல்கள் ஒன்றிய அர சிடம் இல்லை என்று ஒன்றிய அமைச்சர் கைவிரித்துள்ளார். புதிய ஸ்டார்ட் அப் நிறுவனங் களில் 90 சதவீதத்தில் இருந்து 95 சத வீதம் வரை தோல்வி அடைவதாக வந்துள்ள செய்திகள் அரசின் கவ னத்திற்கு வந்துள்ளனவா? அப்படி யெனில் தோல்வி சதவீதம் குறு சிறு தொழில்களில் எவ்வளவு? அரசின் கணக்குகளில் மேற்கூறிய ஊடக ஆய்வுகளுடன் ஒத்துப்போகிறதா? இல்லையெனில் அரசின் கணக்குப் படி தோல்வி சதவீதம் எவ்வளவு? என்று சு.வெங்கடேசன் எம்.பி., கேள்விகளை எழுப்பினார்.
அமைச்சர் பதில்
இதற்கு ஒன்றிய குறு சிறு நடுத்தர தொழில் அமைச்சர் நாராயண் ரானே அளித்துள்ள பதில் வருமாறு: “1961 நடவடிக்கை ஒதுக்கீடு விதி களின்படி ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொழில் மற்றும் வணிக அமைச்ச கத்தின் தொழில் மற்றும் உள் வர்த்தக வளர்ச்சித் துறையின் (DPIIT) கீழ் வருகிறது. அத்துறை தந்த தகவல்களின்படி இந்திய அரசு ஸ்டார்ட் அப் முன்முயற்சி குறித்து விரி வான அணுகுமுறையை வகுத்துள் ளது. இதனால் தேசத்தின் ஸ்டார்ட் அப் சூழல் முறைமை முதிர்ச்சி அடைந்து உலகின் மூன்றாவது பெரும் ஸ்டார்ட் அப் சூழல் முறைமை யாக வளர்ந்துள்ளது. 640 மாவட்டங் களில் 84 ஆயிரம் ஸ்டார்ட் அப் நிறு வனங்கள் அரசால் அங்கீகரிக்கப் பட்டுள்ளன. அவற்றில் 45 சதவீத நிறு வனங்கள் இரண்டாம், மூன்றாம் தட்டு நகரங்களில் உள்ளன. அங்கீ கரிக்கப்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங் கள் 8.4 லட்சம் வேலை வாய்ப்பு களை உருவாக்கியுள்ளன. 100 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் சுமார் 8 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள “யூனிகார்ன்” அந்தஸ்தை பெற்றுள்ளன.” “வழமையான வணிகங்களின் வெற்றி, தோல்வி குறிப்பிட்ட ஆண்டு களின் செயல்பாடு அடிப்படையில் தீர்மானிக்கப்படும் போது ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் வெற்றி தோல்வி துல்லியமாக ஒரு குறிப் பிட்ட கட்டத்தில் மதிப்பிடப்படுவதாக உள்ளது. எல்லா வகை புதிய நிறு வனங்களையும் ஒட்டுமொத்த மதிப் பீட்டுக்குள் கொண்டு வருவது கடினம். ஆகவே அவற்றின் தோல்வி விகிதத்தை கணக்கிடுவதும் சிரமம். ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் மையப்படுத்தப்பட்ட தகவல்கள் அரசி டம் இல்லை.” என்று அமைச்சர் நாரா யண் ரானே பதில் அளித்துள்ளார்.
அறிவிப்போடு கலையும் கனவுகள்
இது குறித்து சு.வெங்கடேசன் எம்.பி கருத்து தெரிவிக்கையில் “அமைச்சர் பதில் அதிர்ச்சி தருகிறது. 90 சதவீதம் முதல் 95 சதவீதம் வரை ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் கடந்த ஐந்து ஆண்டுகளில் தோல்வி அடைந் துள்ளன என்பது எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு அல்ல. பிரபல வணிக இதழ்களின் ஆய்வுகள் தந்துள்ள தகவல்கள் ஆகும். ஸ்டார்ட் அப் நிறு வனங்கள் மூலம் இந்திய இளை ஞர்கள் “வேலை தேடுபவர்கள்” என்ற நிலையில் இருந்து “ வேலை தருபவர்களாக” மாறி விட்டார்கள் என்று பிரதமர் உட்பட அமைச்சர்கள் தம்பட்டம் அடித்தார்கள். ஒரு அறி விப்பை பரபரப்பாக வெளியிட்டு விளம்பரம் தேடுவது, பிறகு அதன் வெற்றி தோல்வியைக் கூட மதிப்பிட அளவுகோல் வைத்திருக்காமல் அடுத்த பரபரப்பான அறிவிப்பை வெளியிட்டு மக்களை ஏமாற்றுவது என்பதே அரசின் வாடிக்கை ஆகிவிட்டது. எவ்வளவு ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தோல்வி அடைந்துள் ளன என்பது பற்றி மையப்படுத்தப் பட்ட தகவல்களே அரசிடம் இல்லை என்று அமைச்சர் கூறுவது அதிர்ச்சி தருகிறது. வேலையின்மை குறித்தும் அரசிடம் தகவல் சேகரிப்பு இல்லை. சி.எம்.ஐ.இ விபரங்களை வெளியிட்டால் ஏற்க மாட்டார்கள். சர்வதேச நிறுவனங்கள் அறிக்கை வெளியிட்டால் உள் நோக்கம் என கூறுவார்கள். இது என்ன நியாயம்? அரசு தனது திட்டங்கள் பற்றி மக்கள் மத்தியில் வெளிப்படையாக இருக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.