states

img

சீத்தாராம் யெச்சூரி சிந்தனைகள்

ஏகாதிபத்தியம் நமது பிராந்தியத்தில் மத அடிப்படைவாத சக்திகளின் வளர்ச்சியை பயன்படுத்தி, நமது நாடுகளை நிலையற்றதாக்கி நிரந்தர கால்பதிப்பை பெற விரும்புகிறது. மத அடிப்படைவாதத்திற்கு எதிரான போராட்டம் அனைத்து மத பிரிவினரின் ஒருங்கிணைந்த போராட்டமாக இருக்க வேண்டும். இத்தகைய சூழ்நிலையில் மட்டுமே மக்கள் ஆளும் வர்க்க கொள்கைகளுக்கு எதிராக தாக்குதலை தொடுக்க முடியும். இடதுசாரிகள் மக்களின் அதிருப்தியை முழுமையான விடுதலைக்கான போராட்டங்களாக மாற்றாவிட்டால், மக்கள் இதுவரை பெற்ற சாதனைகளை பாதுகாப்பதும், அவற்றை முன்னெடுப்பதும் சாத்தியமில்லை.