states

img

அதானி பிரச்சனையில் முறையான விசாரணைக்கு அரசு உத்தரவிட வேண்டும்

புதுதில்லி, பிப்.8- அதானி பிரச்சனையில் ஒரு முறையான விசாரணைக்கு அரசு உத்தரவிட வேண்டும் என்று  மாநிலங்களவையில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் உறுப்பினர் டாக்டர் ஜான் பிரிட்டாஸ் வலியுறுத்தினார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மாநிலங்களவையில் டாக்டர் ஜான் பிரிட்டாஸ் பேசியதாவது: நம் நாட்டில் இப்போது ஒரேயொரு  பிரச்சனைதான் பொங்கி எழுந்துகொண்டி ருக்கிறது.  அதுதான் நம்மில் பலருக்கும் புனிதப்  பசுவாகும். ஆம், பசு, கோ மாதா, என்று ஆட்சி யாளர்களால் தம்பட்டம் அடிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆயினும், அதைவிட மிகப்பெரிய பசு, புனிதப் பசு, இப்போது நம்  நாட்டில் அதானி என்னும் பசுதான். அதானியை விட பெரிய புனிதப் பசு வேறு எதுவும் இல்லை.

மக்களவையில் ஏற்கப்பட்டது

அதானி குறித்து எதுவும் பேசுவதற்கு நீங்  கள் விரும்பவில்லை. உலகத்தையே உலுக்கிக்  கொண்டிருக்கிற ஊழல் குறித்து, அதானி யின் ஊழல் குறித்து இங்கே விவாதிப்பதற்கு நீங்கள் விரும்பவில்லை. இவர் தொடர்பான கதை (episode) குறித்து மூன்று திருத்தங்கள்  நான் கொடுத்துள்ளேன். எதுவும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. இதேபோன்று திருத் தங்கள் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு  அங்கே ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றன. நம் பொருளாதாரத்தை மிகவும் பாதித்திருக்கக் கூடிய, நாட்டின் ஒருமைப்பாட்டைப் பாதித்தி ருக்கக்கூடிய, நாட்டின் நற்பெயருக்குக் களங்  கம் விளைவித்திருக்கக்கூடிய  இதுபோன்ற முக்கியமான பிரச்சனைகள் மீது ஒதுங்கிக் கொள்ள வேண்டும் என்று இந்த அவை முடிவு செய்துள்ளதா?   நான் இந்த அரசாங்கத்தின்மீது குற்றம் சாட்டுகிறேன். இந்திய வரலாற்றில் முதன்  முறையாக, இந்த அரசாங்கம், கறுப்புப் பணத்  தைப் பாதுகாப்பதற்காக, நாட்டுப்பற்றையும் (patriotism), தேச பக்தியையும் (nationalism) பயன்படுத்திக் கொண்டிருக்கி றது. இவ்வாறு குற்றஞ்சாட்டுகிறேன். இவ் வாறு நாட்டுப் பற்றையும் தேசபக்தியையும் ஒரு கேடயமாக அவர்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஹிண்டன்பர்க் ஆய்வு  அறிக்கை அளித்துள்ள குற்றச்சாட்டுகளிலி ருந்து பாதுகாப்பதற்காக ஒரு நிறுவனத்தின் தலைமை நிதி அலுவலர் (CFO of a company), நாட்டின் தேசியக் கொடியின் கீழ் நின்று, தேச பக்தி குறித்து பேசுவதை உங்களால் கற்பனை செய்ய முடியுமா? இதுபோன்று இந்த நாட்டில்  கற்பனை செய்ய முடியுமா? இவ்வாறு கூறும்  நபர் ஓர்ஆஸ்திரேலியக் குடிமகன் என்பதையும் தயவுசெய்து நீங்கள் புரிந்துகொள்ள வேண் டும், அந்த நபர் ஓர் இந்தியக் குடிமகனும் அல்ல.

ஹிண்டன்பர்க்கை வாங்கியிருப்பார்

அதானிக்கு ஆலோசனை வழங்குபவர் கள், ஹிண்டன்பர்க் குறித்து அவருக்கு ஏற்க னவே அறிவித்திருந்தால் அவர் என்டிடிவி-ஐ வாங்குவதற்குப் பதிலாக ஹிண்டன்பர்க்கை வாங்கியிருப்பார். ஹிண்டன்பர்க் வெளிக்கொண்டு வந்தி ருக்கும் விஷயம் புதியது என்று நான் நினைக்க வில்லை. இதற்கு முன்பு, 2016இலிருந்தே, மூன்று ஊழல்கள் வெளிச்சத்திற்கு வந்தி ருக்கின்றன. பனாமா ஆவணங்கள், பார டைஸ் ஆவணங்கள் மற்றும் பண்டோரா ஆவ ணங்கள். இவற்றில் இரண்டு, அதானியுடன் மிகவும் நெருக்கமாக இருந்த நபர்களின்  கறுப்புப் பணம்குறித்து கையாண்டிருக்கின் றன. அவை என்னவாயிற்று? கறுப்புப்பணத்தின் பெயரைக் கூறித்தான் நீங்கள் ஆட்சிக்கு வந்தீர்கள். கறுப்புப் பணத்தை வெளிக்கொணர்ந்து ஒவ்வொரு குடிமகனின் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம்  ரூபாய் போடுவோம் என்று சொல்லித்தான் ஆட்சிக்கு வந்தீர்கள். இப்போதுள்ள கணக்கு களின்படி, கடந்த எட்டு ஆண்டுகளில் கறுப்புப் பணத்தின் அளவு இரட்டிப்பாகிவிட்டது. எனவே, இப்போது உங்கள் உறுதிமொழியை நீங்கள் நிறைவேற்ற வேண்டுமானால் ஒவ்  வொரு குடிமகன் கணக்கிலும் 30 லட்சம் ரூபாய் போட வேண்டும். தயவுசெய்து அவ்வாறு  பணத்தைப் போட்டு உங்கள் உறுதிமொழியை  நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கி றேன்.

ஏற்கனவே விசாரணை நடந்திருக்கிறது

நாட்டில் இரண்டு கோடி ரூபாய்க்கும் குறை வான ஊழலுக்குக் கூட 1957இல் நீதிபதி ஒரு வரின் தலைமையின் கீழ் விசாரணை நடந்தி ருக்கிறது. முத்ராவில் எல்ஐசி பங்குகள் குறித்து நினைத்துப் பாருங்கள். இந்த நாட்டில்  வெளிப்படைத்தன்மையை உத்தரவாதப் படுத்துவதற்காக நீண்ட நெடிய வரலாறு படைத்திருக்கிறோம். இந்த அரசாங்கம் கூட்டு  நாடாளுமன்றக்குழு விசாரணை வேண்டும் என்று நியாயமான முறையில் கோரினால் அதற்கு ஏன் இந்தஅரசு ஓடி ஒளிய வேண் டும்?   மாறாக அவர்கள் கேரளாவை இகழ்ந்து  கொண்டிருக்கிறார்கள். கேரளா, சோமாலியா  என்றே அழைக்கிறார்கள். பயங்கரவாதத்தின் நாற்றங்கால் என்று கேரளாவை அழைக்கி றார்கள். நாங்கள் இவ்வாறு ஒருபோதும் ஒரு  மாநிலத்தைத் தூற்ற மாட்டோம். ஜெய்ராம் ரமேஷ்: யார் அவ்வாறு கூறி யது? டாக்டர் ஜான் பிரிட்டாஸ்: நம் மாண்புமிகு பிரதமர்தான் அவ்வாறு கூறினார். நாட்டின் வங்கிகளைச் சூறையாடிவிட்டு, நாட்டை விட்டு  ஓடிய நபர்களில் நான்கில் மூன்று பங்கு, குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். இதற் காக நாங்கள் எப்போதாவது குஜராத்தை அவ மதித்திருக்கிறோமா? நாங்கள் எப்போதும் அப்படிச் செய்ய மாட்டோம். இந்தியாவின் விடு தலைப் போராட்டத்திற்குப் பெரிய அளவில் பங்களிப்பு செய்திட்ட மாநிலமாகவே குஜ ராத்தை நாங்கள் கருதுகிறோம். ஒரேயொரு விஷயத்தைக் கூறி என் உரை யை நிறைவு செய்கிறேன். நம் நாட்டின் பொரு ளாதாரத்தைப் பாதுகாப்பதை உத்தரவாதப் படுத்துவதற்காக, அதானி பிரச்சனையில் ஒரு முறையான விசாரணை மேற்கொள்ள இந்த  அரசாங்கம் முன்வர வேண்டும் என்று கேட்டுக்  கொண்டு என் உரையை நிறைவு செய்கிறேன். இவ்வாறு டாக்டர் ஜான் பிரிட்டாஸ் கூறி னார்.                          (ந.நி)