புதுதில்லி, செப்.9- ‘ஜி-20’ மாநாட்டின் தில்லி கூட்டுப் பிர கடனத்திற்கு உறுப்பு நாடுகள் ஒரு மனதுடன் ஒப்புதல் அளித்துள்ளதாக, மாநாட்டின் தலைவரும், இந்திய பிரதம ருமான நரேந்திர மோடி அறிவித்துள்ளார். கூட்டுப் பிரகடனம் வெளியாக உத விய அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றியும் தெரி வித்துக் கொண்டுள்ளார். முன்னதாக, கூட்டுப் பிரகடனம் ஏற் கப்பட்டதாக, பிரதமர் மோடி தனது மேசையை சுத்தியலை தட்டி அறிவித் தார். அப்போது, அருகில் இருந்த ஒன் றிய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் உள்பட அரங்கில் உள்ள தலைவர்கள் கைகளைத் தட்டி வர வேற்றனர். எனினும் பிரகடனம் தொடர் பான முழு விவரங்களை பிரதமர் மோடி தெரி விக்கவில்லை. அது பின்னர் வெளி யிடப்படும் என்று கூறப்படுகிறது. பொருளாதாரத்தில் முன்னணியில் திகழும் உலகின் 20 முன்னணி நாடு களைக் கொண்ட ‘ஜி-20’ அமைப்பின் 18-ஆவது உச்சி மாநாடு புதுதில்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் சனிக்கிழமையன்று காலை துவங்கியது. மாநாட்டின் தலைவர் என்ற வகை யில், மாநாட்டுக்கு வருகை தந்துள்ள 40 நாடுகளின் தலைவர்களை, ‘கோனார்க் சக்கர’ பின்னணியில் பிர தமர் நரேந்திர மோடி வரவேற்றார்.
நிரந்தர உறுப்பினரான ஆப்பிரிக்க யூனியன்
ஜி-20’ நாடுகள் கூட்டமைப்பின் நிரந்தர உறுப்பு நாடாக- 54 ஆப்பிரிக்க நாடு கள் மற்றும் மொராக்கோவை உள்ள டக்கிய ஆப்பிரிக்க யூனியனை இணைக்கும் நிகழ்வு நடந்தது. “ஆப்பிரிக்க யூனியனை ஜி-20 இல் சேர்க்க இந்தியா முன்மொழிகிறது. இந்த அறிவிப்பை ஒவ்வொரு நாடும் ஏற்றுக் கொள்ளும் என நம்புகிறோம். ஆப்பிரிக்காவின் பிரசிடென்சியின் நிரந்தர உறுப்பினராக இருக்கையில் அமருமாறு உங்களை (அசாலி அசோவ்மனியை) அழைக்கிறேன்” என்று மோடி அறிவித்தார். அதனை தொடர்ந்து, ஜி-20 நாடு களின் கூட்டமைப்பில் ஆப்பிரிக்க யூனி யன் நிரந்தர உறுப்பினராக இணைந் தது. நிரந்தர உறுப்பினரானதைக் குறிக்கும் வகையில் ஆப்பிரிக்க யூனி யன் தலைவர் அசாலி அசோவ்மனி தனது இருக்கையில் அமர்ந்தார்.
மொராக்கோ நிலநடுக்கத்திற்கு இரங்கல்
மொராக்கோவில் ஏற்பட்ட நிலநடுக் கத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து தனது உரையைத் துவங் கிய நரேந்திர மோடி, காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும், இந்த கடினமான சூழ்நிலையில் மொராக்கோவிற்கு அனைத்து உதவிகளையும் வழங்க இந்தியா தயாராக உள்ளது என்றும் குறிப்பிட்டார்.
வசுதைவ குடும்பகத்திற்கு விளக்கம்
பின்னர் துவக்கவுரை ஆற்றிய பிரத மர் மோடி, ‘ஒரே பூமி; ஒரே குடும்பம்; ஒரே எதிர்காலம்’ (One Earth, One Family, One Future) என்ற மாநாட்டின் கருப் பொருள் குறித்து விளக்கம் அளித்தார். ‘வசுதைவ குடும்பகம்’ எனும் ‘உலகம் அனைத்தும் ஒரு குடும்பமே!’ எனும் இந்திய பாரம்பரியத்தின் பரந்து விரிந்த பார்வையை ‘ஜி-20’ மாநாட்டின் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளுக்கு அவர் விளக்கினார். “உலகிற்கு புதிய பாதையை காட்டு வதில் 21-ஆம் நூற்றாண்டு ஒரு முக் கிய காலமாகும். நாம் அனைவரும் புதிய சவால்களை நோக்கிச் சென்றி ருக்கிறோம். எனவே, நமக்கான பொறுப்புகளை நிறைவேற்றி முன்னேற வேண்டும். கொரோனாவை நம்மால் வெல்ல முடிந்தது. அதேபோல, (உக் ரைன் - ரஷ்யா) போரால் ஏற்பட்ட நம்பிக்கையின்மையும் நம்மால் வெல்ல முடியும்” என்று குறிப்பிட்டார். இறுதியாக, புதுதில்லி ‘ஜி-20’ கூட்டுப் பிரகடனம் அனைத்து உறுப்பு நாடுகளாலும் ஒருமனதாக ஏற்கப் பட்டுள்ளதாக அறிவித்தார். தனது மேசையை சுத்தியலை கொண்டு தட்டி இதை அவர் அறிவித்தார். எனினும் பிரகடன விவரங்களை அவர் வெளி யிடவில்லை.
கூட்டுப் பிரகடனத்தில் ரஷ்ய - உக்ரைன் போர்?
ரஷ்ய - உக்ரைன் போர் தொடர்பாக ‘ஜி-20’ நாடுகளுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக கூட்டுப் பிர கடனம் சாத்தியமாகுமா? என்ற சந்தே கம் இருந்தது. வெள்ளிக்கிழமை வரை இந்தச் சந்தேகம் நிலவியதாக கூறப் பட்டது. ஆனால், இந்திய தூதர்கள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி சம ரசம் ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு, இந்தோனேஷியா வின் பாலி நகரில் நடைபெற்ற ஜி-20 உச்சிமாநாட்டில், உக்ரைனில் நடந்த போர் குறித்தும் தீர்மானத்தில் விவ ரிக்கப்பட்டது. அதில் ரஷ்யா, சீனா வின் ஆட்சேபனைகளைக் குறிப்பிட்டு பாலி கூட்டுப் பிரகடனம் வெளியிடப் பட்டது. தில்லி பிரகடனத்தின் வரைவைப் பொறுத்தவரை, வெள்ளிக்கிழமை வரை உக்ரைன் போர் குறித்த பத்தி காலியாகவே இருந்ததாக கூறப்பட் டது. இந்நிலையில், இந்தியா சார்பில் பேச்சுவார்த்தை நடத்திய தலைமை அதிகாரி அமிதாப் கந்த், இந்த அறி விப்பு வளர்ச்சி மற்றும் புவிசார் அரசி யல் விவகாரங்களில் 100 சதவிகிதம் ஒரு மித்த கருத்தை எட்டியுள்ளதாக தெரி வித்துள்ளார். மேலும் இந்த கூட்டுப் பிர கடனம், ‘வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது’ மற்றும் ‘முன்னோடியா னது’ என்று கூறியுள்ளார்.
விமர்சனமற்ற பொதுவான மொழிப்பயன்பாடு
உக்ரைன் போர் குறித்த பத்தியா னது, “உலகெங்கும் உள்ள மகத்தான மனித இனம், துன்பங்கள், போர்கள், மோதல்களின் எதிர்மறையான தாக் கத்தை எதிர்கொள்வதை நாங்கள் ஆழ்ந்த கவலையுடன் கவனிக்கிறோம்” என்று துவங்குகிறது. அதேநேரம், போருக்கு ரஷ்யாவை குறை எதுவும் கூறாமலேயே, அதற்கு மாறாக, போரால் ஏற்பட்ட மனித துன்பங்களை மட்டும் ‘ஜி-20’ கூட்டுப் பிரகடனம் குறிப்பிட்டுள்ளதாக தெரிகிறது. இந்த அணுகுமுறை, ரஷ் யாவும் மேற்கு நாடுகளும் என இரண்டு தரப்புமே ஏற்றுக்கொள் ளக்கூடிய மொழிப் பயன்பாடு என்றும், ஆனாலும் அவரவர் நிலைப்பாடு களுக்கு ஏற்றவாறு இதற்கு விளக் கத்தை அளித்துக்கொள்ள முடியும் என்றும் கூறப்படுகிறது. ஜி20 மாநாட்டில் ரஷ்ய ஜனாதிபதி புடின், சீன ஜனாதிபதி ஜீ ஜின்பிங் ஆகியோர் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வேறுபாடுகளை விளம்பரப்படுத்த முயற்சிக்காதீர்!
அமெ.வுக்கு சீனா எச்சரிக்கை
ஜி-20 மாநாட்டை வெற்றிகர மாக நடத்தி காட்டுவதன் மூலம், தாங்கள் வலிமையுள்ள நாடு என்ற பிம்பத்தை காட்ட இந் தியா விரும்புகிறது. ‘இந்தியா வுடன் நிற்கிறோம்’ என்று அடிக்கடி கூறிக்கொள்ளும் அமெரிக்கா போன்ற நாடுகள், ஜி-20 மாநாட்டில் பங்கேற்கும் மற்ற நாடுகளுக்கு இடையிலான வேறுபாடுகளை விளம்பரப்படுத்திக்கொள்ள முயற்சிகளை மேற்கொண்டுள் ளன. இந்த மாநாட்டில் எடுக்கும் முடிவுகளானது, கடந்த காலங் களை காட்டிலும் சிக்கலான சூழ் நிலையை எதிர்கொள்ளக்கூடும் என சீன அரசு ஆதரவு நாளிதழான ‘குளோபல் டைம்ஸ்’ செய்தி வெளி யிட்டுள்ளது.