தேர்தல் ஆணையத்தின் அந்தஸ்தை குறைக்கக்கூடாது என பிரதமருக்கு முன்னாள் தலைமை ஆணையர்கள் கடிதம் எழுத முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பொதுவாக நாட்டின் தலைமை தேர்தல் ஆணையர் நிய மனத்தை ஒன்றிய அரசு நேரடியாக கவனித்து வந்தது. அதாவது தேர் தல் ஆணையத்தின் தலைமை ஆணையர்கள் ஒன்றிய அமைச்சர வையின் ஆலோசனை மற்றும் வழி காட்டுதலின்படி குடியரசுத்தலை வரால் நியமிக்கப்படுகிறார்கள். தேர்தல் ஆணையம் ஆளும் அரசுக்கு சார்பாக நடத்தப்படுவ தாக அவ்வப்போது எதிர்க்கட்சி களால் விமர்சனங்களும் முன் வைக்கப்படும் நிலையில், கடந்த மார்ச் மாதம் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு ஒன்றை உச்சநீதி மன்றத்தின் அரசியல் சாசன அமர்வு வழங்கியது. அந்த தீர்ப்பில் ஒன் றிய அமைச்சரவை பரிந்துரை யின்படி தேர்தல் ஆணையர்களை நியமனம் செய்ய கூடாது. இனி மேல் பிரதமர், எதிர்க்கட்சித் தலை வர் மற்றும் இந்திய தலைமை நீதி பதி ஆகியோர் அடங்கிய குழு வால் தேர்தல் ஆணையர்கள் தேர்ந் தெடுக்கப்படுவார்கள். அதற்கான சட்ட விதிகளை வழிவகுக்க வேண் டும். அதுவரை இந்த உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் இந்திய தலைமை நீதிபதி ஆகி யோர் அடங்கிய குழுவால் தேர்தல் ஆணையர்கள் தேர்ந்தெடுக்கப்படு வார்கள் என நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான அமர்வு தேர்தல் ஆணையர்களின் நியமனத்தில் சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் விதமாக இந்த உத்தரவை பிறப் பித்தது. உச்சநீதிமன்ற உத்தரவால் கலக்கமடைந்துள்ள மோடி அரசு தேர்தல் ஆணையர்களின் அந் தஸ்தை குறைக்கும் மசோதாவை திங்களன்று நடைபெறவுள்ள நாடா ளுமன்ற கூட்டத்தொடரில் அறி முகப்படுத்தியுள்ளது. மசோதா மூலம் தேர்தல் ஆணையத்தின் அந் தஸ்தை அமைச்சரவை செயலா ளர் அந்தஸ்துக்கு குறைக்க ஒன் றிய அரசு திட்டமிட்டுள்ள நிலை யில், தேர்தல் ஆணையத்தின் அந் தஸ்தை குறைக்கக்கூடாது என்று பிரதமர் மோடிக்கு முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பிர தமருக்கு கடிதம் எழுத திட்டமிட் டுள்ளனர்.