பன்சால் சகோதரர்களைத் தொடர்ந்து சிசோடியா வழக்கிலும் ‘இ.டி.’க்கு இடி
புதுதில்லி, அக். 6 - சிபிஐ, வருமான வரித்துறை, அம லாக்கத்துறை, தேசிய புலனாய்வு முக மை உள்ளிட்ட விசாரணை அமைப்புக் களை, நரேந்திர மோடி தலைமையி லான ஒன்றிய பாஜக அரசானது, தனது அரசியல் எதிரிகள் மீதான பழிவாங்க லுக்குப் பயன்படுத்தி வருவதாக, கடந்த 9 ஆண்டுகளாகவே குற்றச்சாட்டு உள்ளது. ஆனால், ஊழல் ஒழிப்பு நட வடிக்கையாகவே விசாரணை அமை ப்புகள் நடவடிக்கை எடுப்பதாகவும், தங்களுக்கு அதில் எந்த பங்கும் இல்லை என்றும் பாஜக நழுவி வருகிறது. இந்நிலையில், அமலாக்கத்துறை தனக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை பழிவாங்கல் நடவடிக்கைக்கு பயன் படுத்த முடியாது என்றும், ஆதார மில்லாமல் கைது நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடாது என்றும் அடுத்த டுத்து 2 வழக்குகளில் உச்ச நீதிமன்றமே கடுமையாக விமர்சித்துள்ளது. பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (PMLA) கீழ் அமலாக்கத்துறை (En forcement Directorate - ED) மேற் கொண்ட கைது நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்று எம்3எம் (M3M) ரியல் எஸ்டேட் குழுமத்தின் இயக்கு நர்கள் பங்கஜ் பன்சால் மற்றும் பசந்த் பன்சால் ஆகியோர் பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தை நாடினர். ஆனால், அமலாக்கத்துறை நட வடிக்கையை ரத்து செய்ய முடியாது என்று கடந்த ஜூலை 20 அன்று உயர் நீதி மன்றம் கூறிவிட்டதால், பன்சால் சகோ தரர்கள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
எழுத்துப்பூர்வ அறிக்கை தேவை
இந்த மனுவை நீதிபதிகள் ஏ.எஸ். போபண்ணா மற்றும் பி.வி. சஞ்சய் குமார் அமர்வு, கடந்த புதனன்று விசா ரித்தது. அப்போது, கைது செய்யப் பட்டதற்கான காரணங்களை அம லாக்கத்துறை குற்றம் சாட்டப்பட்டவர் களிடம் வாய்மொழியாக வாசித்து மட்டுமே காட்டியதாகவும், எழுத்துப் பூர்வமாக வழங்கவில்லை என்றும் புகார் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட உச்ச நீதி மன்றம், குற்றம் சாட்டப்பட்டவரை கைது செய்வதற்கான காரணங்களை விசாரணை அதிகாரி படித்து மட்டுமே காட்டியது, அரசியலமைப்பின் 22 (1) மற்றும் பிஎம்எல்ஏ (PMLA) சட்டப் பிரிவு 19 (1) இன் ஆணையை நிறை வேற்றவில்லை என்று கூறியதுடன், கைது செய்யப்பட்ட நபருக்கு விதி விலக்கு இல்லாமல், கைது செய்யப் பட்டதற்கான காரணங்களின் நகல் வழங்கப்படுவது அவசியம் என்று நாங்கள் நம்புகிறோம். அமலாக்கத் துறை கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக் கத் தவறியதால் மட்டுமே, ஒருவரைக் கைதுசெய்வதானது ஏற்றுக்கொள்ளக் கூடிய காரணமாகாது. கைது செய்யப் பட்டதற்கான காரணங்கள் சரிதானா என்பதை கண்டறிவதற்காக, ஒருவரை காவலில் வைப்பதும் சரியான நட வடிக்கையாக இருக்க முடியாது. ஆனால், பசந்த் பன்சால், பங்கஜ் பன் சால் ஆகியோர் மீதான கைது நட வடிக்கையில் அமலாக்கத்துறை தன்னி ச்சையாக நடந்து கொண்டுள்ளது” என்று சாடியது. பங்கஜ் பன்சால் மற்றும் பசந்த் பன்சால் ஆகியோரை அமலாக்கத் துறை கைது செய்தது சட்டவிரோதம் என்றும் அறிவித்ததுடன், அவர் களுக்கு ஜாமீன் வழங்கியும் உத்தரவிட்டது.
பழிவாங்கல் நடவடிக்கை கூடாது
மேலும், “பணமோசடி எனும் பொருளாதாரக் குற்றங்களைத் தடுப்பதற்காகவே, அமலாக்கத் துறைக்கு 2002-ஆம் ஆண்டு சட்டத் தில் கடுமையான அதிகாரங்கள் வழங்கப் பட்டன. இந்த அதிகாரங்களைக் கொண்டு அமலாக்கத்துறை பழி வாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடும் என்று அப்போது கருதியிருக்க வில்லை. எனவே, பொருளாதாரக் குற்ற த்தைத் தடுக்கும் கடுமையான பொறுப்பைக் கொண்ட ஒரு முதன்மை விசாரணை நிறுவனமாக இருப்பதால், அமலாக்கத்துறையின் ஒவ்வொரு நட வடிக்கையும் வெளிப்படையாகவும், நியாயமாகவும் இருக்க வேண்டும்” என்றும் கண்டித்தது. இந்நிலையில், வியாழக்கிழமை யன்று தில்லி முன்னாள் முதல்வர் மணீஷ் சிசோடியா தொடர்பான வழக்கில், அமலாக்கத்துறை மீண்டும் உச்சநீதிமன்றத்தின் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது. தில்லியில் மதுபானக் கொள்கை வகுத்ததில், தில்லி துணைமுதல்வர் மணீஷ் சிசோடியா ஊழலில் ஈடுபட்ட தாக, கடந்த 2023 பிப்ரவரி 26 அன்று சிபிஐ கைது செய்தது. அதைத் தொட ர்ந்து 12 நாட்களுக்குப் பிறகு மார்ச் 9 அன்று அமலாக்கத் துறையும் பண மோசடி வழக்கில் சிசோடியாவைக் கைது செய்தது. கடந்த 6 மாதங்க ளுக்கும் மேலாக ஜாமீனே வழங்கப் படாமல் சிசோடியா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே, சிசோடியாவின் ஜாமீன் மனு வியாழனன்று நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, எஸ்.வி. பாட்டி தலை மையிலான உச்சநீதிமன்ற அமர்வில் விசாரணைக்கு வந்தது. மணீஷ் சிசோடியா சார்பில் மூத்த வழக்கறி ஞர் அபிஷேக் சிங்வி ஆஜராகி வாதாடி னார். சிபிஐ தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி. ராஜு ஆஜரானார். அப்போது, கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி. ராஜூவைப் பார்த்து, அடுக்கடுக்கான பல கேள்விகளை நீதிபதிகள் எழுப்பினர். “தில்லி மதுபான கொள்கை விவ காரத்தில் லஞ்சம் கைமாறியதாக கூறு கிறீர்கள். யார் அதை வழங்கினார்கள்? இந்த வழக்கில் மணிஷ் சிசோடி மீதான புகாருக்கு ஆதாரம் எங்கே? சட்ட விரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் இவர் மீது எப்படி குற்றம்சாட்டுகிறீர்கள்? தினேஷ் அரோ ரா என்பவரின் வாக்குமூலத்தைத் தவிர வேறு ஏதாவது ஆதாரமோ, ஆவணமோ இருக்கிறதா? லஞ்சம் குறித்து விஜய் நாயர், மணீஷ் சிசோ டியா பேசியதை நீங்கள் பார்த்தீர்களா? வாட்ஸ் ஆப் உரையாடல்களை ஆதார மாக ஏற்க முடியுமா? அப்ரூவர் கேள்விப் பட்டேன் என்றுதான் சொல்கிறார். எனவே, இது வெறும் ஒரு அனு மானம். ஆனால், நமக்கு ஆதாரம் வேண்டும். இதில் ஆதாரம் எங்கே இருக்கிறது..? குறுக்கு விசாரணை நடக்கும்போது இது இரண்டு நிமிடம் கூட நிற்காது” என்று நீதிபதிகள் காட்டமாக குறிப்பிட்டுள்ளனர்.