புதுதில்லி பிப். 17- நாட்டில் சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் கடுமையாக வீழ்ச்சியடைந்து வரும் நிலையில், ‘வணிகம் செய்வது எளிது’, ‘இந்தியா உலக ளாவிய தொழில் மையம்’ என்ற ஒன்றிய பாஜக அரசின் தொடர் முழக்கங்கள் வெற்றுத்தன மானவை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி குற்றம் சாட்டியுள்ளார். நாட்டில் முன்னெப்போதும் இல்லாத வகையில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் (MSME) கடந்த 5 ஆண்டுகளில் 72% தேக்க நிலையில் உள்ளன என்றும், நான்கில் மூன்று பங்கு சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் கடந்த ஐந்தாண்டுகளில் தங்களுடைய வணிகம் தேக்கமடைவதாகவோ, குறைந்துவிட்ட தாகவோ அல்லது செயலிழந்துவிட்டதாகவோ கருதுகின்றன எனவும் 1,08,500 உறுப்பினர் களைக் கொண்ட இந்திய தொழில்முனை வோர் சங்கங்களின் கூட்டமைப்பு நடத்திய ஆய்வில் கூறப்பட்டுள்ளது. மேலும் தங்களது தொழில்களில் 76% பேர் லாபம் ஈட்டவில்லை என்றும், வங்கி நிதியைப் பெறுவது ஒரு பெரிய பிரச்சனையாக உள்ளது என்றும் கூறியுள்ளனர்.
ஆய்வில் பதிலளித்தவர்களில் 28% மட்டுமே தங்களது தொழில்கள் வளர்ந்து வருவதாகவும், 45% பேர் தொழில் தொடங்குவதிலோ, தொட ர்ந்து நடத்துவதிலோ அல்லது வாழ்க்கை முறையிலோ எதையும் செய்ய முடியவில்லை என்று ஆய்வில் கருத்து தெரிவித்துள்ளனர். 87% பேர் ஒன்றிய பட்ஜெட் ஏமாற்றமளிப்ப தாகவும், பெரும் பின்னடைவை ஏற்படுத்துவ தாகவும் அல்லது கருத்துகள் ஏதுமில்லாமல் இருப்பதாகவும் கூறியுள்ளனர். 42% சிறு குறு தொழில் முனைவோர் தங்கள் தொழிலில் லாபம் கிடைக்குமா என்ற கவலைகளை முக்கிய சவால்களில் ஒன்றாகக் குறிப்பிட்டுள்ளனர். 70% பேர் தாமதமான கட்டண ரசீதுகளைப் பற்றியும், 40% பேர் மூலப்பொருட்களின் விலை யேற்றம் மற்றும் கிடைக்கும் தன்மை குறித்து கவலைப்படுகிறார்கள். 52% பேர் சட்டப் பூர்வ இணக்கங்களைக் கடுமையாகக் கடைப் பிடிப்பதையும், 62% பேர் தங்கள் பொருட் களுக்கான கிராக்கி மற்றும் ஜாப் ஆர்டர் நிலையைப் பற்றி கவலைப்படுகிறார்கள். 38% பேர் இளைஞர்களின் மனிதவள ஆதாரம் மற்றும் வேலைவாய்ப்பு திறன் குறித்து பயப்படுகிறார்கள்.
ஜிஎஸ்டி சட்டத்தில் மாற்றம் செய்க!
இதுதொடர்பாக தொழில் முனைவோர் சங்கங்களின் கூட்டமைப்பு (சிஐஏ) தனது அறிக்கையில்,”ஒன்றிய அரசு வணிகம் செய்வது எளிது என்று கூறினாலும் குறுந் தொழில் முனைவோர் சிக்கலான, காலாவதி யான சட்டங்கள் மற்றும் தொழில்நெருக்கடிச் சுமைகளால் தொடர்ந்து பாதிக்கப்படு கிறார்கள். இதைக் கருத்தில் கொண்டு, அரசாங்கம் குறுந்தொழில்கள் தொடர்பான கடும் சட்டங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும், அகற்ற வேண்டும் அல்லது மறு வரைவு செய்ய வேண்டும் என தொழில்முனை வோர் கூட்டமைப்பு கருதுகிறது. சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் மேம்பாட்டுச் சட்டம் 2006-ஐ ஒன்றிய அரசு திருத்த வேண்டும் என்றும், சிறு வணிகங்களுக்கு மிகவும் நட்பாக இருக்கும் வகையில் ஜிஎஸ்டி சட்டத்தில் மாற்றங்களைச் செய்ய வேண்டும். இந்தியாவில் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களின் இக்கட்டான நிலை, 2023-24 பட்ஜெட் குறித்து தொழில்முனை வோர்களின் கருத்து மற்றும் நிறைவேற்றப்படாத கோரிக்கைகள் ஆகிய வற்றை அறிவதே இந்த ஆய்வின் நோக்கம்” என்றும் கூறியுள்ளது.
யெச்சூரி கண்டனம்
சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் வீழ்ச்சி யடைந்து வருவது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி வேதனையும் அரசுக்கு கண்டனமும் தெரிவித்துள்ளார். ‘தொழில் செய்வதை எளிதாக்குதல்’ (Ease of doing business)”, ‘இந்தியா: உலகளாவிய தொழில் மையம் (India: Global industrial hub)’ போன்ற மோடியின் முழக்கங்கள் வெற்று முழக்கங்கள்தான். கிட்டத்தட்ட நான்கில் மூன்று பங்கு சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தங்களுடைய வணிகம் தேக்கமடைந்துள்ளது, வீழ்ச்சியடைந்து ள்ளது, வெறுமனே மூடப்பட்டுவிட்டது என்று குமுறியுள்ளன. ஒன்றிய பட்ஜெட் ஏமாற்ற மளிப்பதாக 87% பேர் கூறுகிறார்கள். சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் தொழில்துறை யில் அதிகபட்ச வேலை வாய்ப்புகளை வழங்குகின்றன. இதனை கருத்தில் கொள்ளா மல் பொருளாதாரத்தை சீரழித்து, அதிகரித்து வரும் வேலையின்மை, வறுமையின் தாங்க முடியாத துயரங்களை மக்கள் மீது சுமத்து வதுடன், விலைவாசி உயர்வையும் சேர்த்து வழங்கும் மோடி அரசு, கூட்டாளிகளுக்கு அதீத லாபத்தை உறுதி செய்கிறது” என குற்றம்சாட்டியுள்ளார்.