நாட்டை உலுக்கிய “கோர” மண்டல் ரயில் விபத்து
புவனேஸ்வர், ஜூன் 3- ஒடிசா ரயில் விபத்து தேசத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த விபத்தில் 290 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காய மடைந்துள்ளனர். உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. கடந்த 30 ஆண்டு காலத்தில் நடந்த ரயில் விபத்துகளில் இது மிகவும் மோச மான விபத்து என்று கூறப்படுகிறது.
ஒன்றிய அமைச்சர்
விபத்து நடந்த பகுதியை நேரில் சென்று பார்வையிட்ட ரயில்வே அமைச் சர் அஸ்வினி வைஷ்ணவ் “இது ஒரு துயர்மிகு விபத்து. ரயில்வே, தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர், மாநில பேரி டர் மீட்புக் குழுவினர் இணைந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்ற னர். காயமடைந்தவர்களுக்கு மிகச் சிறந்த உயர் சிகிச்சை அளிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக உயர் மட்ட விசாரணைக் குழு அமைக்கப் பட்டுள்ளது. ரயில் பாதுகாப்பு ஆணை யரும் விசாரணை மேற்கொள்வார். மீண்டும் இதுபோன்ற நிகழ்வு நடக்காத வாறு நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்று கூறினார்.
பிரதமர் மோடி ஆய்வு
சனிக்கிழமை மாலை விபத்து நடந்த இடத்தில் பிரதமர் நரேந்திர மோடி ஆய்வு மேற்கொண்டார். பின்னர் பால சோர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரை சந்தித்து ஆறுதல் கூறிய பிரதமர் மோடி செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘விபத்தால் பாதிக்கப் பட்டவர்களைக் கண்டு வேதனை அடைந்தேன். ரயில் விபத்தில் பலர் உயிரிழந்தது வேதனை அளிக்கிறது. காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். விபத்து நடந்த இடத்தில் மீட்புப் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. காயம டைந்தவர்களுக்கு தேவையான உதவி களை ஒன்றிய அரசு செய்து தரும். ரயில் விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய விரிவான விசாரணை நடத்தப்படும்’ என்றார்.
நவீன் பட்நாயக்
விபத்தை அடுத்து பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரி வித்த ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் செய்தியாளர்களிடம் கூறுகையில், “இது மிகவும் துயரமான விபத்து. உள்ளூர் மக்களுக்கும் குழுக்களுக்கும் நான் மிகுந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள்தான் இரவு முழுவதும் பணியாற்றி மீட்புப் பணி களை மேற்கொண்டார்கள். ரயில் பாது காப்புக்கு எப்போதுமே முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும். காயமடைந்த மக்கள் பாலசோர் மற்றும் கட்டாக் மருத்துவமனைகளில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். அவர்கள் விரைவில் குண மடைய பிரார்த்திக்கிறேன்” என்றார்.
உலகத் தலைவர்கள் இரங்கல்-ஆறுதல்
இந்த விபத்தை அறிந்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் கள், அதிகாரிகள், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி உள்ளிட்ட மாநில முதலமைச்சர்களும், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா, கனடா பிரதமர் ஜஸ் டின் ரூடோ, பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் உள்ளிட்ட உலக நாடு களின் தலைவர்களும் உயிரிழந்தவர் களுக்கு இரங்கலையும், அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதலையும் தெரி வித்துள்ளனர்.
ரத்த தானம்
விபத்தில் காயமடைந்த வர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள கட்டாக் மருத்துவமனையில் நூற்றுக்கும் மேற் பட்ட இளைஞர்கள் ரத்த தானம் கொடுத்துள்ளதாக மருத்துவமனை யைச் சேர்ந்த மருத்துவர் ஜெயந்த் பாண்டா தெரிவித்துள்ளார். இதுவரை 3000 யூனிட்டுக்கும் அதிகமாக ரத்தம் பெறப்பட்டுள்ளது என் றும் அவர் கூறியுள்ளார்.
ரயில்கள் ரத்து
இந்த கோர விபத்தின் எதிரொலி யாக நாடு முழுவதும் 48 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், 39 ரயில்கள் வேறு பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளதாகவும் இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. திருவனந்த புரம்-கொல்கத்தா அதிவிரைவு எக்ஸ்பிரஸ் (22641), பெங்களூரு-கௌஹாத்தி அதிவிரைவு எக்ஸ்பிரஸ் (12509), ஹவுரா-திருப்பதி ஹம்சஃபர் எக்ஸ்பிரஸ் (20889) உள்ளிட்ட ரயில் கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கன்னி யாகுமரி - திப்ருகர் விவேக் எக்ஸ்பிரஸ் (22503), ஹவுரா-மைசூரு எக்ஸ்பிரஸ் (22817) ஆகிய ரயில்கள் திருப்பி விடப்பட்டுள்ளன.
30 ஆண்டுகளில் நிகழ்ந்த மிகப்பெரிய விபத்து
இந்த விபத்து குறித்து தேசிய பேரி டர் மீட்பு படையின் தலைவர் அதுல் கர்வால் கூறுகையில், “உயிரிழந்த வர்களின் எண்ணிக்கையின் அடிப்படை யில் பார்க்கும்போது இது மிகவும் மோச மான விபத்தாகும். விபத்து நடந்த இடத்தில் தேசிய பேரிடர் மீட்பு படை யின் 9 குழுக்கள் மீட்புப் பணியில் ஈடு பட்டுள்ளன” என்றார். கடந்த 30 ஆண்டு களில் நிகழ்ந்த ரயில் விபத்துகளில் ஒடிசா விபத்து 3-ஆவது மிகப்பெரிய விபத்து என்று கூறப்படுகிறது. விபத்துக்குள்ளான இரு ரயில்களி லும் 2296 பேர் முன்பதிவு செய்து பய ணம் செய்துள்ளதாக தகவல் வெளி யாகியுள்ளது. கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் 1,257 பேரும், யஸ்வந்த்பூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் 1,039 பயணிகளும் முன்பதிவு செய்து பயணித்திருந்ததாக தகவல்கள் வெளி யாகியுள்ளன. இந்நிலையில், முன் பதிவு செய்யாமல் பயணித்தவர்களில் பலர் உயிரிழந்திருப்பதால், அவர் களை அடையாளம் காண்பது மற்றும் தகவல்கள் திரட்டுவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ரயில் நிலைய மேம்பாடும் ஒன்றிய அரசின் விளம்பரமும்
கடந்தாண்டு பட்ஜெட்டில் அம்ரித் பாரத் ஸ்டேசன் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 1275 ரயில் நிலையங்களை மேம்படுத்தப் போவதாக மோடி அரசு பெரும் விளம்பரங்களை செய்தது. பயணிகளுக்கு நல்ல அனு பவத்தை கொடுக்கப் போகிறோம் என்று கூறிக்கொண்டு அவர்களது பாதுகாப்பை விட்டுவிட்டது. ஒன்றிய பாஜக அரசு ரயில்வே துறையில் உள்ள லட்சக்கணக்கான பணியிடங்களை நிரப்பவும், சிக்னலை நவீனமய மாக்கி பயணிகளின் பாதுகாப்பை உறுதிசெய்யவும் எவ்வளவு முதலீடு செய்தது? சிக்னல் நவீனமயப்படுத்த லுக்கு நிபுணர்களிடமோ, தொழிற் சங்கங்களிடமோ, ரயில்வே வாரியத்தி டமோ அரசாங்கம் கலந்தாலோசித் ததா? என கேள்வி எழுகிறது. 2022-2023இல் உயிர்ச் சேதம் உள் ளிட்ட பெரும் விளைவுகளை உருவாக் கிய 48 ரயில் விபத்துகள் நடந்துள்ளன. கடந்த ஆண்டை விட 13 விபத்துகள் அதிகரித்துள்ளன என்பதை ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக் கையின் மூலம் அறிய முடிகிறது.
லாலு சாடல்
‘அலட்சியம் காரணமாகவே அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உயர்மட்ட விசாரணை நடத்தி, இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்; இந்த அரசு ரயில்வே முழுவதையும் சீரழித்து விட்டது’ என ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவரும், முன்னாள் ரயில்வே துறை அமைச்சருமான லாலு பிரசாத் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார்.
மருத்துவ உதவிகளை விரைந்து செய்க: சிபிஎம்
புதுதில்லி, ஜூன் 3- ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட் டத்தில் பகனாகா ரயில் நிலையத்தில் மூன்று ரயில்கள் அடுத்தடுத்து மோதி உயிரிழந்தோருக்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சமீப காலங்களில் மிகவும் மோச மான முறையில் ஏற்பட்டுள்ள ரயில் விபத்தில் தங்களுக்கு நெருக்கமான வர்களை இழந்து பரிதவிக்கும் குடும் பத்தினருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தன் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறது. காயமடைந்த வர்களுக்கு விரைவாக மருத்துவ உதவி கிடைத்திடவும், உயிரிழப்புகள் உயரா மல் தடுத்திடவும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாகக் கவனம் செலுத்த வேண்டும். யஷ்வந்த்பூர் எக்ஸ்பிரஸ் முதலில் தடம் புரண்டதற்கான காரணங்களை யும், பின்னர் அது கோரமண்டல் எக்ஸ்பிரசுடன் மோதி பின்னர் பகனாகா ரயில் நிலையத்தில் நின்றிருந்த மற் றொரு ரயிலுடன் மோதியது தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தப் பட்டு, விபத்துக்கான காரணங்கள் கண்டறியப்பட வேண்டும். ரயில்வே பாது காப்பு குறித்து எழுந்துள்ள ஆழமான கேள்விகளுக்கு விடைகள் காண முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். மோடி அரசாங்கத்தால் ‘நவீனமயம்’ என்ற திட்டங்களுக்காக ரயில்வே பாது காப்பு அம்சங்களை கண்டுகொள்ளா மல் விட்டுவிட முடியாது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள் ளது. (ந.நி.)
கோரமண்டல் பாதையில் ஏன் ‘கவச்’ தொழில்நுட்பம் இல்லை?
இந்த வழித்தடத்தில் ரயில்கள் மோதலைத் தடுக்கும் அமைப்பான ‘கவச்’ கிடைக்கவில்லை என்று இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது. ரயில் விபத்தை தவிர்க்கும் கவச் தொழில்நுட்பம் ஏன் கோரமண்டல் பாதையில் இல்லை? மொத்த இந் திய ரயில் பாதைகளில் 2 சதவீதம் மட்டுமே கவச்சின்கீழ் கொண்டு வரப்பட்டிருக்கிறது.
கவச் என்றால் என்ன?
ரயில்களில் ஏற்படும் விபத்தை தடுக்கும் வகையில் இந்திய ரயில்வே துறையால் அறிமுகப்படுத்தப் பட்டுள்ள தொழில்நுட்பம்தான் இந்த கவச். அதாவது இரண்டு ரயில்கள் அதிவேகமாக வரும் போது தடம் மாறி மற்றொரு ரயிலு டன் மோதும் வாய்ப்பு ஏற்படுமா னால் தன்னிச்சையாக ரயிலின் வேகத்தை குறைக்கும் தொழில்நுட் பம்தான். கவச் (Kavach) என்றால் கவசம் என்று பொருள். ஆத்ம நிர்பார் பாரத் திடத்தின் ஒரு பகுதியாக, 2022 பட்ஜெட்டில் கவச் திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்த தொழில்நுட்பத்தின் கீழ் மொத்தம் 2,000 கி.மீ ரயில் நெட் வொர்க் கொண்டு வர திட்டமிடப் பட்டது. இது இந்திய ரயில்வேயின் தானியங்கி ரயில் பாதுகாப்பு கருவி யாகும். இது முழுமையாக உள்நாட் டில் உருவாக்கப்பட்ட தொழில்நுட் பம். இந்த தொழில்நுட்பத்தை ரயில்வேயின் வடிவமைப்பு ஆராய்ச்சி அமைப்பான ஆர்டிஎஸ்ஓ உரு வாக்கியுள்ளது. இது கடந்த ஆண்டு ஐதராபாத் ரயில் நிலையத்தில் சோதனையும் செய்யப்பட்டது. தெற்கு மத்திய ரயில்வேயில் குல் லாகுடா-சிட்கிட்டா ரயில் நிலை யங்களுக்கிடையேயும் இந்த பரி சோதனை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் தற்போது விபத்து ஏற் பட்டுள்ள ரயில்வே பாதை கவச் தொழில்நுட்பத்தின் கீழ் இல்லை என்று இந்திய ரயில்வே விளக்க மளித்துள்ளது.
தொழில்நுட்ப நிபுணர்கள் கருத்து
கவச் தொழில்நுட்பம் இல்லாத தால் தான் ஒடிசா ரயில் விபத்து நடந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. விபத்துக்கு ளான 3 ரயில்களில் எதிலும் கவச் தொழில்நுட்பம் இல்லை என்று சொல்லப்படுவதால் அதுகுறித்து விவாதங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில், கவச் இருந்தி ருந்தால் இத்தகைய மிகப் பெரிய விபத்தை தவிர்த்திருக்கலாமா என்பது ஊகங்களின் வசமே விடக்கூடியதாக உள்ளது என்று தொழில்நுட்ப வல்லுநர்கள் கூறு கின்றனர். காரணம், ஒடிசா விபத்து இந்திய ரயில் விபத்து வரலாற்றி லேயே மிகவும் சிக்கலானது. ஒரு ரயில் தவறான பாதையில் மாறிச் சென்று, நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதுகிறது. அந்த சரக்கு ரயிலின் பெட்டிகள் தடம் புரண்டு வேறொரு தண்டவாளத் தில் வந்த மற்றொரு எக்ஸ்பிரஸ் ரயிலின் மீது மோதுகிறது. அந்த ரயிலின் பெட்டிகளும் தடம் புரள்கின்றன. இப்படி மூன்று ரயில்கள் விபத்துக்குள்ளாகி யுள்ளன. இத்தகைய சமயத்தில், கவச் இதில் எந்த அளவுக்கு உதவி யிருக்கும் என்பது இதுபோன்ற விபத்துகளை அது தடுத்திருந்த முந்தைய சான்றுகள் இருந்தால் மட்டுமே உறுதிப்படுத்த முடியும் என நிபுணர்கள் கூறுகின்றனர். இருந்தாலும், இதுபோன்ற தொழில்நுட்பங்களை சுணக்க மின்றி செயல்படுத்த பரிந்துரைத் துள்ளனர்.
வெளிப்படையான விசாரணை தேவை: சிபிஎம் அறிக்கை
சென்னை, ஜூன் 3- ரயில் விபத்தில் உயிரிழந்த வர்களின் குடும்பங்களுக்கு சிபிஐ (எம்) இரங்கல் தெரிவித்துள்ளது. வெளிப் படையான விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத் துள்ள அறிக்கை: ஒடிசா மாநிலம், பாலசோர் அருகில் மூன்று ரயில்கள் மோதியதில் ரயிலில் பய ணித்தவர்கள் பல நூறு பேர் மரணம டைந்துள்ள செய்தி நெஞ்சை உலுக்குவ தாக உள்ளது. படுகாயமடைந்த ஆயி ரத்திற்கும் அதிகமானவர்கள் உயி ருக்குப் போராடி வருகின்றனர். இந்த கோரச் சம்பவம் இந்தியாவையே உலுக்கியுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்க லையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம். தமிழ்நாடு அரசின் சார்பில், உயிரி ழந்த குடும்பங்களுக்கும், காயமுற்று சிகிச்சை பெற்று வருபவர்களுக்கும் நிவா ரணம் அறிவித்துள்ளதுடன், அமைச் சர்கள், அதிகாரிகள் தலைமையிலான குழு ஒடிசாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டு மீட்பு பணிகளை முதலமைச்சர் தீவிரப் படுத்தியுள்ளார். தமிழ்நாட்டைச் சார்ந்த பயணிகளை அடையாளம் கண்டு பத்திரமாக திரும்புவதற்கான அவசர உதவி மையங்கள் ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. ரயில் விபத்தில் உயிரிழந்த குடும் பங்களுக்கு ஒன்றிய அரசு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்கிடவும், படு காயமுற்றவர்களுக்கு தரமான சிகிச்சை யும் - உரிய நிவாரணமும் வழங்கிட வேண்டுமெனவும், மூன்று ரயில்களும் ஒரே இடத்தில் விபத்துக்குள்ளானது குறித்து வெளிப்படையான முழுமை யான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.