புதுதில்லி, பிப். 1 - உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமன விவகாரத்தில், ஏற்கெனவே ஐந்து பெயர்களைக் கொண்ட பரிந்துரை நிலு வையில் உள்ள நிலையில், 2 பெயர்கள் அடங்கிய புதிய பரிந்துரையை கொலீஜியம் அளித்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளாகவே, உயர் நீதிமன்ற மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமன விவகாரத்தில், ஒன்றிய பாஜக அரசு, கொலீஜியத் தோடு மோதல் போக்கைக் கையாண்டு வருகிறது. நீதிபதிகளை நாங்கள்தான் நியமிப்போம் என்று மோடி அரசு தொடர்ந்து முரண்டு பிடித்து வருகிறது. ‘கொலீஜியம் இந்த நாட்டின் சட்டம்; மாற்று ஏற்பாடுகள் இல்லாத வரை அதனை ஏற்றுத்தான் ஆக வேண்டும்” என்று உச்சநீதிமன்றம் கண்டித்தும், மோடி அரசு அதிகார ஆட்டத்தை ஆடி வருகிறது. அதன்படி, 2022 டிசம்பர் 13 அன்று, பங்கஜ் மித்தல், சஞ்சய் கரோல், பி.வி. சஞ்சய் குமார், நீதிபதி அஹ்சானு தீன் அமானுல்லா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகிய ஐந்து பெயர்களை, உச்ச நீதிமன்ற நீதிபதி பதவிக்கு கொலீஜி யம் பரிந்துரைத்த நிலையில், வழக்கம்போல நியமன உத்தரவை வழங்காமல் மோடி அரசு கிடப்பில் போட்டுள்ளது. இந்நிலையில், தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையில் நீதிபதி கள் எஸ்.கே. கவுல், கே.எம். ஜோசப், எம்.ஆர். ஷா, அஜய் ரஸ்தோகி மற்றும் சஞ்சீவ் கண்ணா ஆகியோர் அடங்கிய கொலீஜியம், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பதவிக்கு, புதிய இரண்டு பெயர்களை பரிந்துரை செய்துள்ளது. அதாவது தற்போது அலகாபாத் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி யாக இருக்கும் ராஜேஷ் பிண்டல், குஜராத் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி அரவிந்த் குமார் ஆகியோரை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க வேண்டும் என்று ஒன்றிய அரசிடம் கூறியுள்ளது. இதுதொடர்பான அறிக்கையில், “நீதிபதி ராஜேஷ் பிண்டல் பெயர் ஒருமனதாகவும், அரவிந்த் குமாரின் பெயர், ‘பின்னர் பரிசீலிக்கலாம்’ என்று நீதிபதி கே.எம். ஜோசப்பின் ஒரே யொரு மாற்றுக் கருத்தைத் தவிர்த்து, பெரும்பான்மையாகவும் கொலீஜி யம் தேர்வு செய்தது
இந்த பெயர்களைப் பரிந்துரைப்ப தற்கு முன்னதாக, 1. அந்தந்த தாய் நீதிமன்றங்களில் உள்ள தலைமை நீதி பதிகள் மற்றும் மூத்த நீதிபதிகளின் மூப்பு மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதி களின் ஒட்டுமொத்த பணி மூப்பு; 2. பரிசீலனையில் உள்ள நீதிபதிகளின் தகுதி, செயல்திறன் மற்றும் நேர்மை; 3. உச்ச நீதிமன்றத்தில் பன்முகத் தன்மை மற்றும் உள்ளடக்கத்தை உறுதி செய்ய வேண்டியதன் அவ சியம்: அதாவது, (i) உச்சநீதி மன்றத்தில் பிரதிநிதித்துவப் படுத்தப்படாத அல்லது போதுமான பிரதிநிதித்துவம் இல்லாத உயர் நீதி மன்றங்களின் பிரதிநிதித்துவம்; (ii) சமூ கத்தின் விளிம்புநிலை மற்றும் பின் தங்கிய பிரிவுகளைச் சேர்ந்த நபர்களை நியமித்தல்; (iii) பாலின வேறுபாடு; மற்றும் (iv) சிறு பான்மையினரின் பிரதிநிதித்துவம்; போன்ற அம்சங்களைக் கொலீஜியம் கருத்தில் கொண்டது. இவர்கள், இந்திய உச்சநீதிமன்றத்தின் நீதிபதி களாக நியமிக்கப்படுவதற்கு எல்லா வகையிலும் மிகவும் தகுதியான வர்கள் மற்றும் பொருத்தமானவர்கள் என்று கொலீஜியம் கண்டறிந்தது” என்று காரணங்களைப் பட்டிய லிட்டுள்ளது. அத்துடன், “2022 டிசம்பர் 13-ஆம் தேதியிட்ட தீர்மானத்தின் மூலம் கொலீ ஜியம் முன்னர் பரிந்துரைத்த பெயர் களை உச்சநீதிமன்றத்திற்கு நியமனம் செய்ய தற்போது பரிந்துரைக்கப்பட்ட இரண்டு பெயர்களைக் காட்டிலும் முன்னுரிமை பெறும். மேலும் முன்பு பரிந்துரைக்கப்பட்ட ஐந்து நீதிபதி களின் நியமனங்கள் தனித்தனியாக வும் முன்னதாகவும் இந்த தீர்மானத் தால் பரிந்துரைக்கப்பட்ட இரண்டு நீதிபதிகளுக்கு முன்பாக அறிவிக்கப் பட வேண்டும்” என்பதையும் ஒன்றிய அரசுக்கு கொலீஜியம் தெளிவுபடுத்தி யுள்ளது.
34 நீதிபதிகளைக் கொண்ட உச்ச நீதிமன்றம் தற்போது 27 நீதிபதிகளு டன் செயல்பட்டு வரும் நிலையில், காலியாக இருக்கும் 7 நீதிபதிகள் பணி யிடங்களை நிரப்ப உச்ச நீதிமன்றம் கொலீஜியம் நடவடிக்கை எடுத்து வரு கிறது. எனினும், நாங்கள்தான் நீதிபதி களை நியமிப்போம் என்று கூறி, கொலீ ஜியம் பரிந்துரைகளுக்கு ஒப்புதல் அளிக்காமல் நரேந்திர மோடி அரசு காலத்தைக் கடத்தி வருகிறது. அண்மையில், உப்புச் சப்பில்லாத காரணங்களைக் கூறி, சவுரப் கிர்பால், சோம சேகரன் சுந்தரேசன், ஜான் சத்யன், அமிதேஷ் பானர்ஜி, சக்யா சென் ஆகிய 5 பேரை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க முடியாது என்று ஒன்றிய அரசு மறுத்து விட்டது. இதனை கடுமையாக விமர்சித்த கொலீஜியம், ஒன்றிய அரசு கூறிய அந்த பொருத்தமற்ற காரணங்கள் என்ன? என்பதையும் பகிரங்கமாக வெளியிட்டது. இந்திய நீதித்துறை வரலாற்றில் இது முன்னெப்போதும் இல்லாத நிகழ்வாகும். அத்துடன், இந்த 5 பேரின் பெயர்களை மீண்டும் ஒன்றிய அரசுக்கே அனுப்பி வைத்தது குறிப்பிடத்தக்கது.