states

2 மாதமாக சிகிச்சையில் இருக்கும் குக்கி பழங்குடி எம்எல்ஏ!

இம்பால், ஜூலை 25 -  மணிப்பூர் வன்முறையில் குக்கி பழங்குடி சமூகத்தை சேர்ந்த அப்பா விப் பொதுமக்கள் மட்டுமின்றி, அந்த சமூகத்தைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ-க்களும் தாக்குதலுக்கு உள்ளாகினர்.  இவ்வாறு இனவெறி தாக்குத லுக்கு உள்ளான பாஜக எம்எல்ஏ-க் களில் ஒருவர் 2 மாதங்களாக மருத்து வமனையில் படுத்தபடுக்கையாக இருப்பது தெரியவந்துள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் பாஜக சார்பில் 3 முறை சட்டமன்றத்துக்கு தேர்வு செய்யப்பட்டவர் வங்குசாஜின் வால்டே. 61 வயதான இவரால் தற்போது எந்த துணையும் இன்றி அசைய கூட முடியாது. குரலை இழந்து பேசவும் முடியாமல் மருத்துவமனை யில் தவித்து வருகிறார். குக்கி கிறிஸ்துவ பழங்குடி  சமூகத்தைச் சேர்ந்த இவர், மணிப்பூர் முதல்வர் பைரேன் சிங்கிற்கு பழங் குடிகள் தொடர்பான ஆலோசகராகவும் இருந்து வந்தார். மணிப்பூரில் கடந்த மே 3 அன்று துவங்கிய குக்கி பழங்குடிகள் மீதான மெய்டெய் இனத் தவரின் தாக்குதல்களில் பாதிக்கப் பட்டவர்களில் இவரும் ஒருவர். தில்லி யில் உள்ள தனியார் மருத்துவமனை யில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரின் தற்போ தைய நிலை மிகவும் பரிதாபமாகஉள்ளது.  உயிருக்கு ஆபத்தான நிலை யில் மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்ட வால்டே-வை, இது வரை மணிப்பூர் முதல்வரோ, அமை ச்சரோ, பாஜக தலைவர்களோ சந்தி க்கவும் இல்லை; நலம் விசாரிக்கவோ இல்லை என்கிறார் அவரது மகன் ஜோசப். “எனது தந்தை இப்போது ஒரு குழந்தை போல இருக்கிறார். அவருக்கு பேசவும் நடக்கவும் மீண் டும் கற்றுக் கொடுக்கவேண்டும். முன்பு, எனது தந்தை  மூலமாக எனக்கு மாநில அரசு நிர்வாகத்தில் நிறைய நண்பர்கள்இருந்தனர். ஆனால், இன்று நாங்கள் மாநில அரசுடன் தொடர்பில் இல்லை” என்று கூறும் ஜோசப், தற்போது தாங் கள் கையறு நிலையில் விடப்பட்டு ள்ளதாக கண்ணீர் வடித்துள்ளார்.